சென்னை: "கும்போணம் போனோன".. அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள கோவில்களுக்கெல்லாம் போகணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்.. ஆனால் ஊர் ஊரா பஸ் மாறிப் போக பலருக்கும் அயர்ச்சியாக இருக்கும்.. அதையெல்லாம் தீர்த்து வைக்க வந்து விட்டது நம்ம தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்.
கும்பகோணத்துக்கு போய்ட்டா போதும்.. அங்கிருந்து தலைக்கு வெறும் ரூ. 750 பயணக் கட்டணத்தில் நவகிரக சுற்றுலாவையே முடித்து விடலாம்.. கேட்கவே கிளப்பலா இருக்குல்ல.. படிச்சுப் பாருங்க.. இன்னும் அலப்பறையா இருக்கும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்திலிருந்து இந்த அற்புதமான ஸ்கீமை களத்தில் இறக்கிருக்காங்க.. டீட்டெய்லா சொல்றோம் கேட்டுக்கங்க.. நீங்க என்ன பண்றீங்க.. நேரா கும்பகோணம் வந்துருங்க.. அங்க இருந்து காலைல 6 மணிக்கு பஸ் புறப்பட்டு நேரா திங்களூர் சந்திரன் கோவிலுக்குப் போய்ச்சேரும். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்தா, நேரா போய் ஆலங்குடி குரு பகவான் கோவில் தரிசனத்துக்கு காலை 7.15 மணிக்கு நிறுத்துவாங்க. சாமி கும்பிட்டதும் பசிக்கும்ல.. அதனால "பிரேக்பாஸ்ட்" பிரேக் விடுவாங்க.
சாப்பிட்டு முடிச்சதும் பஸ்ஸை காலைல 9 மணிக்கு மறுபடியும் எடுத்து நேரா திருநாகேஸ்வரம் போவாங்க.. அங்க யாரு இருக்கா?.. நம்ம ராகு பகவான்.. அவரை சப்ஜாடா தரிசனம் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறி உக்காந்தா, அடுத்த ஸ்டாப் சூரியனார் கோவில். பத்து மணிக்கெல்லாம் போய்ரலாம்.. சூரிய பகவானை நமஸ்காரம் பண்ணி திவ்யமாக தரிசனத்தை முடித்த பிறகு காலைல 11 மணி வாக்குல, கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்குப் போய்டலாம். அங்கே போய் சுக்கிரனை தரிசனம் பண்ணிட்டு 11.30 மணிக்கு அப்படியே வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சேருவோம். செவ்வாய் கிரக தரிசனத்தை சிறப்பாக முடித்து அப்படான்னா வெளியே வந்தா.. வயிறு கபகபன்னு பிறாண்டும்.. ஸோ, சூப்பரான லன்ச்சுக்குப் போய்ரலாம். 12.30 மணியில இருந்து 1.30 மணி வரை மத்தியான சாப்பாட்டு பிரேக்.. சூப்பரான மதிய உணவை முடித்து விட்டு, விசுக்குன்னு பஸ்ஸுல ஏறி உக்காந்தா, 2.30 மணிக்கெல்லாம் திருவெண்காடு வந்து விடலாம்.. அங்கு புதனாரைப் பார்த்து மன நிறைவோடு சாமியை கும்பிடுங்க.

அதை முடித்த பிறகு 4 மணிக்கு கீழ பெரும்பள்ளம் வந்து சேருவோம். அங்கு கேது பகவான் தரிசனம். கடைசியாக 4.45 மணிக்கு திருநள்ளாறு போகிறோம்.. அங்கு சனி பகவான் தரிசனம்.. "தொட்ட சனி விலகட்டும்.. கொட்டு கொட்டென்று நலம் பல கொட்டட்டும்" என்று மனமுருக வேண்டிக் கொண்டு வெளியே வந்தால்.. அவ்வளவுதாங்க.. டூர் முடிஞ்சு போச்சு... அப்படியே 6 மணிக்கு பஸ்ஸை எடுத்தால், ராத்திரி 8 மணிக்கெல்லாம் கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்து விடுவோம்.. !
இத்தனை கோவில்களைச் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு ஜஸ்ட் ரூ. 750 மட்டும்தான் டிக்கெட் கட்டணம். பிப்ரவரி 24ம் தேதி முதல் இந்த சேவை தொடங்குகிறது. உங்களோட அன்றாட வேலைகள் எதும் பாதிக்காதபடி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்ள மட்டும்தான் இந்த சிறப்புப் பஸ் இயக்கப்படுகிறது. எனவே மன நிறைவான வீக்என்ட் டூர் போகணும்னு ஆசைப்பட்டீங்கன்னா நேரா கும்பகோணம் வந்துருங்க.. மத்ததை இவங்க பாத்துப்பாங்க.
எல்லாஞ்சரி தலைவரே.. பஸ்ஸுக்கு எங்க போய் டிக்கெட் புக் பண்றது?.. அதுக்குத்தான் உங்க கைலயே TNSTC ஆப் இருக்கே.. எடுங்க, அழுத்துங்க.. புக் பண்ணிக்கங்க.. அது சரியா வராட்டி, www.tnstc.in இணையதளமும் இருக்கு.. அதிலேயும் போய் பண்ணிக்கலாம்.
நல்லா ஞாபகம் வச்சுக்கங்க.. பிப்ரவரி 24ம் தேதி இந்த அட்டகாசமான நவகிரக சுற்றுப்பயணம் தொடங்குகிறது.. பயன்படுத்திக்கங்க.. பலன் அடையுங்க!
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}