சென்னை: சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களிலிருந்து தினசரி 175 பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படவுள்ளதாக சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலைக்கு அதிக அளவில் தினசரி பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், வரும் மே 23ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேபோல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 90 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா தளங்கள், கோயில்கள், மற்றும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் சென்னைலிருந்து தினசரி திருவண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இது தவிர பணி நிமித்தமாக திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு தினசரி ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கி வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை வழித்தட பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு வரும் மே 23ஆம் தேதி முதல் சென்னை கோயம்பேட்டில் இருந்து 85 பேருந்துகள் தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும், மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி, வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் கூடுதலாக 30 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
மேலும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 50 பேருந்துகள் இயக்கப்படும். என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}