தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மே 08 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
விசுவாவசு வருடம், சித்திரை 25 ம் தேதி வியாழக்கிழமை
ஏகாதசி. மீனாட்சி திருக்கல்யாணம். பகல் 03.16 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 11.23 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை அமிர்தயோகமும் , பிறகு இரவு 11.23 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.30 முதல் 01.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - கலைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். தம்பதிகளுக்குள் சிறு விவாதங்கள் வரலாம். பிள்ளைகளின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுங்கள். கண் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷபம் - புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். கொழுப்பு பிரச்சினை இருப்பவர்கள் நொறுக்கு தீனிகளை தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்பத் தலைவிகளின் தேவைகள் நிறைவேறும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இருக்காது.
மிதுனம் - சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நிலை மேம்படும். அரசியல்வாதிகள் மக்களிடம் நல்ல பெயரை எடுப்பார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
கடகம் - பிள்ளைகளை நல்ல வழியில் வழிநடத்துவீர்கள். வெளி உலகத் தொடர்புகள் அதிகரிக்கும். இரு சக்கர வாகனம் ஓட்டும்போது வேகத்தை குறைக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய கிளை திறக்கலாம். பணப் பிரச்சினை இருக்காது.
சிம்மம் - வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. பழைய பிரச்சினைகளுக்கு புதிய தீர்வு காண்பீர்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். நண்பர்கள் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும்.
கன்னி - புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். தேவையான செலவுகளை மட்டும் செய்யுங்கள். முகம் பொலிவு பெறும். அலுவலகத்தில் திறமை வெளிப்படும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். நட்பால் ஆதாயம் கிடைக்கும்.
துலாம் - அலுவலகத்தில் வேலை அதிகம் இருக்கும். வீட்டு சுபகாரியங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பேச்சாளர்கள் புதிய மொழி கற்றுக்கொள்வார்கள். பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வியாபாரிகள் வெளியூர் பயணம் செல்வார்கள்.
விருச்சிகம் - பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பணப்பிரச்சினை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
தனுசு - இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். தவிர்க்க முடியாத பயணங்களில் நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்தவும். பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழில் அதிபர்கள் வருமானத்தை பெருக்க திட்டம் போடுவார்கள். உடல் பொலிவு பெறும்.
மகரம் - குடும்பத்தில் வாக்குவாதம் வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். காதலை வெளிப்படுத்த இது சரியான நேரம்.
கும்பம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பம் ஏற்படும். இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
மீனம் - பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும். பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக.. ரோஹித் ஷர்மா திடீரென ஓய்வை அறிவித்தது ஏன்?
உங்களுக்கு bp இருக்கா?.. தயவு செய்து இந்த 5 உணவுகளை மறந்தும் எடுத்துக்காதீங்க!
ரெட்ரோ ரூ.100 கோடி வசூல்.. சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு..அமோக வரவேற்பு..!
கதையல்ல நிஜம்.. வளர்ப்புத் தாயும், சைக்கிளும்!
அமைச்சர் ரகுபதியின் சட்டத்துறை.. துரைமுருகனுக்கு கூடுதல் துறையாக ஒதுக்கீடு.. திடீர் இலாகா மாற்றம்
KKR அணி Playoffsக்கு செல்வது ரொம்ப கஷ்டம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் செஞ்ச சம்பவம்!
ஆறுதல் வெற்றியில் தோனி செய்த புதிய சம்பவம்.. பல காலத்திற்கு நின்று பேசப் போகும் சாதனை!
அமிர்தசர் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட்டுகள்.. பாகிஸ்தான் ராணுவம் வீசியதா?
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்.. டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?
{{comments.comment}}