அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்

Jul 03, 2026,06:05 PM IST

சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் ஒரு முக்கிய திருப்பமாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள இந்த விலகல் முடிவு, அதிமுக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.


விலகலுக்கான காரணம்:

தனது விலகல் குறித்து வைகைச் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய கட்சியின் தலைமை மற்றும் செயல்பாடுகள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சுயநலப் போக்கும், தொண்டர்களைப் புறக்கணிக்கும் தன்மையுமே தனது இந்த முடிவுக்குக் காரணம் என்பதை அவர் வெளிப்படையாக உணர்த்தியுள்ளார்.


அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கியக் கருத்துக்கள்:




"கட்சியும், தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் நல்ல தலைவர் அல்ல.மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு என்பதைப் புரிந்துகொண்டேன். திமுக.,வுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதால் அதிமுக தனது அடையாளத்தை இழந்து விட்டது"


இந்த வார்த்தைகளின் மூலம், கட்சியின் தற்போதைய தலைமை மீது அவர் கொண்டிருந்த தீவிரமான அதிருப்தியும், கட்சியில் தமக்கு நேர்ந்த தொடர் புறக்கணிப்புகளுமே அவரை இந்த Extreme முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது என்பது தெளிவாகிறது.


அரசியல் பின்னணி :

வைகைச் செல்வன் அதிமுகவின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவராக அறியப்பட்டவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். கட்சியின் கொள்கைகளைப் பொதுமேடைகளிலும், ஊடக விவாதங்களிலும் ஆக்ரோஷமாகவும் ஆழமாகவும் வாதிடக்கூடிய ஒரு முக்கிய முகமாக நீண்டகாலம் விளங்கி வந்தார்.  அதிமுக உட்கட்சிப் பூசல்களையும், பல்வேறு சவால்களையும் சந்தித்து வரும் இந்தச் சூழ்நிலையில், அவரைப் போன்ற ஒரு மூத்த மற்றும் பேச்சாற்றல் மிக்க நிர்வாகி கட்சியை விட்டு வெளியேறுவது, அதிமுகவிற்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.


அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

வைகைச் செல்வன் அதிமுகவிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர் மாற்று அரசியல் கட்சியில் இணையப் போகிறாரா அல்லது தற்காலிகமாக அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கப் போகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

news

"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்

news

21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்