அயர்வை அறுக்கும் அன்பு மொழியுடன்
தயக்கம் போக்கும் மா மருந்தாய்
வியக்கும் வண்ணம் இருக்கும் என்னவர்;
வேறென்ன வேண்டும் எனக்கு?
விரும்பும் வண்ணம் இரு; என்றே
கரும்பனைய சொல் சொல்லும் மகள்;
நிர்ப்பந்தம் இல்லா இனிய உறவு;
வேறென்ன வேண்டும் எனக்கு?

நா புரள்வது சற்றே ஏறக்குறைய
இருந்தாலும், கைவிடாது என்னை, தூக்கியே
நிறுத்தும் கலைமகள் கருணையில் நானிருக்க;
வேறென்ன வேண்டும் எனக்கு
தளைகள் குறைந்த என் முதுமையில்
அலைபாயும் மனதை நிலை நிறுத்த
சலியாது நா சொல்லும் திருவாசகம்:
வேறென்ன வேண்டும் எனக்கு?
விரும்பிய பணியில் நீண்ட காலம்
இருந்தே நான் இயங்கி வந்தேன்.
குற்றமற்ற பணியில் அயர்வும் பெற்றபின்
வேறென்ன வேண்டும் எனக்கு?
வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
{{comments.comment}}