பணம், அது ஒரு வெற்றுக் காகிதம். அதுவே, உழைப்பின் மதிப்பை உணர்த்தித் தானும் உயரும் உயர் சாதனம். அது, தேவையால் நிறைப்பவருக்கு மதிப்புக்குரியதாகவும், தேவையைக் குறைப்பவருக்கு மதிப்புக் குன்றியதாகவும் தன்னை அடையாளப்படுத்துகிறது.
"பணம் தேவைக்குப் பயன்படுத்துபவரைப் பாதுகாக்கிறது, தேவைக்கு மிகுதியாய்ப் பாதுகாப்பவரையோ, பயன்படுத்துபவரையோ பலவீனப்படுத்துகிறது". எனவே தேவையைக் குறைப்போம், அத் தேவையையும் சேவையால் நிறைப்போம்.

பணம் கொடுத்து உயிர்வளியை வாங்கலாம். ஆனால், உயிரை வாங்க முடியாது. சில நேரங்களில் உயிரின் பிரிவைத் தடுத்தாலும், சில உறவுகளின் பிரிவைத் தடுக்கவே முடியாது. எனவே, உணர்வற்ற பணத்திற்காக உணர்வுநிறை உறவை இழந்து விடாதீர்கள்.
வாழ்வில் செல்வத்தை சேமிப்பதை விட, பலர் மனங்களில் செல்வாக்கை சேமிப்பதில் சிறப்புக் கவனம் செலுத்துங்கள். செல்வம் குறையும்பொழுதும் செல்வாக்கே உங்களை உயர்த்தும்; உங்களை மகிழ்வால் தினம் நிறைத்து, மனக்குறை உடன் களைக்கும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!
சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!
"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு
கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!
அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
{{comments.comment}}