தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், கார்த்திகை 27 ம் தேதி வியாழன்கிழமை
பரணி தீபம். இன்று இரவு 08.37 வரை துவாதசி, அதற்கு பிறகு திரியோதசி. காலை 08.19 வரை அஸ்வினி, பிறகு பரணி. காலை 06.19 வரை மரணயோகம், பிறகு காலை 08.19 வரை அமிர்தயோகம், அதன் பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்
இன்றைய ராசிபலன் :

மேஷம் - புதிய பொறுப்புகள் மூலம் உங்களின் தகுதிகளை நிரூபிக்க வேண்டிய காலம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வீர்கள். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். எதிலும் நிதானத்துடன், நல்ல முடிவுகளை எடுக்க முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம் - குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் சற்ற கவனம் செலுத்துவது நல்லது. திறமைகள் வெளியப்படும்.
மிதுனம் - அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழில், பணம், தம்பதிகள் ஒற்றுமை, ஆரோக்கியம் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் நிதானத்துடன் நடந்து கொள்வதால் மகிழ்ச்சி பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
கடகம் - சுறுசுறுப்பாக செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் எப்போதும் கவனம் வைத்திருப்பது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.
சிம்மம் - ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை தீர்க்க நினைப்பீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கன்னி - மனதில் குழப்பங்கள் அதிகரிக்குள். வாழ்க்கை துணையுடன் நிதானத்துடனும், அன்பாகவும் நடந்து கொள்வது அன்பை பலப்படுத்தும். நிதி நிலை உயர்வதற்கான வழிகள் பிறக்கும். முதலீடுகள் தொடர்பான முடிவுகளை சிந்தித்து எடுப்பது நல்லது.
துலாம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கையில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிட்டு, மனம் விட்டு பேச நினைப்பீர்கள். பணத்தை புத்திசாலித்தனமாக கையாள்வது சிறப்பு.
விருச்சிகம் - குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வேலைகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தனுசு - மகிழச்சிகரமான நாளாக இருக்கும். காதலில் இனிமை கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். பணிகளில் சிறப்பாக செயலாற்றவீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மகரம் - வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். உடல்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் - வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம் - இனிமையான நாளாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் 2026 – பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைப்பு
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
தலைவலிக்குதுடா, தலை வலிக்குதே.. கவலையே படாதீங்க.. சூப்பர் பாம் இருக்கு.. வீட்டிலேயே தயாரிக்கலாம்!
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்.. விளக்கேற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
யெஸ் வங்கி கடன் மோசடி ...அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்
{{comments.comment}}