12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 26, 2025... இன்று இவங்க தான் கிங்

Aug 26, 2025,10:21 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆவணி 10ம் தேதி செவ்வாய்கிழமை

பகல் 02.21 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 05.05 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை 

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - தம்பதிகளின் கனவு நனவாகும். மருத்துவ செலவுகள் வரலாம். உறவினர்கள் உதவி செய்வார்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறலாம். மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசி கிட்டும். உடல் நலத்தில் கவனம் தேவை.


ரிஷபம் - வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். தேவையற்ற பயம் நீங்கும். இறை பக்தி அதிகரிக்கும். வெளியூர் பயணம் செய்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவார்கள். அண்டை வீட்டாரிடம் நட்பு அதிகரிக்கும். 


மிதுனம் - வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனை கிடைக்கும். அது முக்கிய முடிவுகள் எடுக்க உதவும். மூத்த சகோதரியால் நன்மை உண்டு. தள்ளிப்போன சுபகாரியம் நடக்கும். பணம் தாராளமாக வரும். அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். 


கடகம் - விற்பனையாளர்கள் சாதுர்யமாக பேசி விற்பனையை அதிகரிப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் வெளிநபர்கள் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மனைவி ஒத்துழைப்பார். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல திருப்பம் ஏற்படும். வீடு கட்ட கடன் கிடைக்கும்.


சிம்மம் - நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். மனைவி வீட்டாரிடம் நல்ல உறவு ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்வீர்கள். வெளியில் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். உடல் நலத்தில் கவனம் தேவை. சுப காரியம் கைகூடும். ஆவணங்களை பத்திரமாக வைக்கவும். கையிருப்பு அதிகரிக்கும். 


கன்னி - மார்க்கெட்டிங் துறையினருக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்வார்கள். கட்டிடம் மற்றும் வீடு கட்டும் பணி முடியும். மூத்த சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.


துலாம் -   மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் சிக்கனமாக இருந்து பணத்தை சேமிப்பார்கள். பெற்றோர்களின் உடல் நலம் மேம்படும். வேலை செய்பவர்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்கள் உதவி செய்வார்கள்.


விருச்சிகம் - பாதியில் நின்ற கட்டிட வேலை சிறப்பாக நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களின் கனவு நிறைவேறும். வேலை செய்பவர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். கடல் சம்பந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். 


தனுசு -  வியாபாரத்திற்கு வங்கி கடன் கிடைக்கும். ஆன்மீகப் பணிகள் சிறப்பாக நடக்கும். புனித யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பங்குச் சந்தையில் லாபம் பெறுவீர்கள். பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு மதிப்பு கூடும்.


மகரம் - பெண்களின் சேமிப்பு அதிகரிக்கும். கணவரின் அன்புக்கு பாத்திரமாவார்கள். தடைகள் நீங்கும். எல்லாம் சுலபமாக முடியும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். புதிய தொழிலில் ஆர்வம் கூடும். பணம் நாலாபுறமும் இருந்து வரும். சுப நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்கும். 


கும்பம் -  சதயம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இன்று சந்திராஷ்டமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். அவிட்டம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அனைத்து காரியங்களையும் தொடங்கலாம். 


மீனம் - பெண்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகளிடையே நல்ல புரிதல் ஏற்படும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட முயற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் நன்றாக படித்துவிட்டு எழுதவும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்