ஆனி திருமஞ்சனம்.. ஆனி மாதம் 18ம் தேதி நடைபெறும் .. சிவபெருமானுக்கான சிறப்பு உற்சவம்

Jul 02, 2025,12:49 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆனி திருமஞ்சனம் விசுவாவசு வருடம் 20 25 ஜூலை இரண்டாம் தேதி புதன்கிழமை ஆனி மாதம் 18ஆம் நாள் சிவபெருமானின் வடிவங்களில் ஒருவரான நடராஜமூர்த்திக்கு ஆனி திருமஞ்சன உற்சவம் நடைபெறுகிறது.


சிவபெருமான் என்றாலே அபிஷேக பிரியர் அவருக்கு தினம் தோறும் அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் சிவ வடிவங்களில் ஒருவரான நடராஜ மூர்த்திக்கு ஒரு வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும் .இந்த ஆறு அபிஷேகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனி மாதத்தில் நடைபெறும் இன்றைய நடராஜர் திருமஞ்சன உற்சவம்.


ஆடல் அரசரான நடராஜப்பெருமானுக்கு ஒரு வருடத்தில் அபிஷேகம் நடைபெறும் நாட்கள் :சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி ஆருத்ரா அபிஷேகம் ,மாசி சதுர்த்தசி இந்த ஆறு நாட்கள் மட்டுமே நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.




ஆனி மாதம் வரும் வளர்பிறையில் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்திற்கு  ஆனி உத்திர திருமஞ்சனம் என்று பெயர்  .இந்த அபிஷேகத்தை "மகா அபிஷேகம் "என்றும் கூறுவர் .அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த உற்சவம் மிக விமர்சையாக நடைபெறுகிறது. சிதம்பரத்தில் பத்து நாட்களில் உற்சவமாக கோலாகலமாக நடைபெறுகிறது.


ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் குருந்தை மரத்தடியில் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் அவருடைய திருக்காட்சியை அளித்து மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல சிவபெருமான் தன்னுடைய கைப்பட எழுதியது தான் திருவாசகம் . மாணிக்கவாசகரையும் தில்லை சிதம்பரத்தில் தன்னுடன் ஜோதியாக ஐக்கியம் ஆக்கிக் கொண்ட தினமும் இந்த சிறப்பான ஆனி உத்திரம் நட்சத்திர நாளில் தான் என்று கூறப்படுகிறது .இந்த நாளை சிறப்பிக்கும் விதமாகவே சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.


சிதம்பரம் நடராஜருக்கு ஒவ்வொரு உற்சவத்தின் போதும் ஒவ்வொரு சபையில் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சித்திரை ,ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் உற்சவங்களின் போது தில்லை கனக சபையில் அபிஷேகம் நடைபெறும் .ஆனால் ஆனி மாத உத்தர திருமஞ்சனமும், மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும் ராஜசபையில் வைத்து நடத்தப்படும் .இன்றைய நாள்  ஆனி திருமஞ்சனம் அதிகாலை 3:00 மணி துவங்கி தொடர்ந்து 6 மணி நேரம் திருநீறு ,பால் ,தயிர் தேன் ,பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுவதை "மகா அபிஷேகம் "என்று கூறுவர். பின்னர் காலை 10 மணி அளவில் நடராஜருக்கு  சிறப்பு அலங்காரங்களும் ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். நடராஜ பெருமானும், சிவகாமி அம்மையும்   பக்தர்களுக்கு தரிசனம் அருள்வார்கள்.


ஆனி திருமஞ்சன தரிசனம் செய்தால் அனைத்து விதமான புண்ணிய பலன்களும் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் செல்வ வளம் ,மகிழ்ச்சி, குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுதலை, திருமண வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் ,பண பிரச்சனைகள், உடல் உபாதைகள், பண பிரச்சினைகள் என அவரவர் வேண்டுதல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் இந்த ஆனி திருமஞ்சன அபிஷேக நாள்.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்