திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!

Aug 20, 2025,01:34 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பிரதோஷ வழிபாடு: விசுவாசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் இருபதாம் தேதி புதன்கிழமை ஆன இன்று ஆவணி நான்காம் நாள் பிரதோஷம் அனுஷ்டிக்கப்படுகிறது.


பிரதோஷம் என்பது இந்து மதத்தில் ,ஒவ்வொரு 15 நாட்களுக்கும் வரும் 13 வது நாளில் அதாவது திரியோதசி திதியில் வரும். சிவபெருமானையும், நந்தியையும் வழிபடுவதற்கு உகந்த ஒரு புனிதமான நாளாகும். 


பிரதோஷ நேரம்: அனைத்து சிவன் கோவில்களிலும் பொதுவாக மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. பிரதோஷம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் 13 வது திதியான திரியோதசி திதியில் வருகிறது .பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கும் ,பயம் நீங்கும் ,மரண பயம் விலகும் மற்றும் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.




பிரதோஷத்தின் வரலாறு: புராணங்களின்படி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது . அதிலிருந்து உலக மக்களை காக்க சிவபெருமான் அந்த விஷத்தை உண்டு உலகை காப்பாற்றினார் .இதற்கு நன்றி செலுத்தும் வகையில் தேவர்கள் சிவனை வழிபட்ட நாளே பிரதோஷமாக கருதப்படுகிறது.


இந்த நாளில் சிவபெருமான் பூமியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வதாக ஐதீகம். பிரதோஷ  நாளில் சிவபெருமானை வழிபடுவதனால் முற்பிறவி பாவங்கள் மற்றும் சகல தோஷங்களும் நீங்கி புண்ணியம் சேரும் என்றும் கூறப்படுகிறது .மேலும் பிரதோஷ வழிபாடு துன்பங்களை நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியை தரும் .கடன் தொல்லைகள், நோய்கள் நீங்கும்.


தொடர்ந்து 21 பிரதோஷங்களை தரிசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 33 பிரதோஷங்களை தொடர்ந்து தரிசித்தால் சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 77 பிரதோஷங்களை தரிசித்தால் ஒரு ருத்திர யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


பிரதோஷ வழிபாடு செய்யும் முறை :பிரதோஷ நாளான இன்று சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானையும் ,நந்தி தேவரையும் வழிபட வேண்டும் .கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் மற்றும் வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு .நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம் .எனவே நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசித்து வழிபடுவது சிறப்பு. நம் வேண்டுதல்களை நந்தி தேவரின் காதில் கூறி வழிபாடு செய்யலாம் 


"ஓம் நமசிவாய "எனும் பஞ்சாட்சர மந்திரத்தை நாள் முழுவதும் கூறி, பிரதோஷ வழிபாடு செய்து அனைத்து தோஷங்களும் துன்பங்களும் நீங்க பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர்   உங்கள் ஸ்வர்ணலட்சுமி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்