சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ் கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள். தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு முன்பு மதராஸ் என்ற பெயரில்தான் சென்னை மாகாணம் அறியப்பட்டது. மதராஸ் ஸ்டேட், சென்னை மாகாணம் என்பதே அதன் பெயராக அந்தப் பெயரை மாற்றி தமிழ்நாடு என்று வைக்க வேண்டும் என்று கோரி விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் ஜூலை 27, 1956 முதல் உண்ணாவிரதம் தொடங்கினார் பழுத்த காங்கிரஸ்காரரும், காந்தியவாதியுமான தியாகி சங்கரலிங்கனார். அவரது கோரிக்கை அப்போது நிறைவேறவில்லை. உண்ணாவிரதம் இருந்து வந்த சங்கரலிங்கனார், அக்டோபர் 13, 1956 அன்று உயிர் நீத்தார்.
அவரது தியாகம் அடுத்து வந்த திமுக ஆட்சியில்தான் உரிய பலனைக் கண்டது. அவரது தியாகத்தின் காரணமாகவே, மெட்ராஸ் மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் கண்டது. அதை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை தலைமையில் அமைந்த முதல் திமுக ஆட்சியில் ஜூலை 18ம் தேதி, 1967ம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டுவதாக அறிவித்தார் பேரறிஞர் அண்ணா.
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
மாம்பழ பரிசு.. விஷாலின் விளையாட்டுகள் (12)
நெருக்கடியான தெருவில் கடைகளுக்கு நடுவே விடுதி.. அமர்நாத் பயண அனுபவங்கள் (2)
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
{{comments.comment}}