சென்னை: ஜூலை 18ம் தேதி தமிழ் கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள். தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய நாள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்.
அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி 'தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு' என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு முன்பு மதராஸ் என்ற பெயரில்தான் சென்னை மாகாணம் அறியப்பட்டது. மதராஸ் ஸ்டேட், சென்னை மாகாணம் என்பதே அதன் பெயராக அந்தப் பெயரை மாற்றி தமிழ்நாடு என்று வைக்க வேண்டும் என்று கோரி விருதுநகரில் உள்ள தேசபந்து மைதானத்தில் ஜூலை 27, 1956 முதல் உண்ணாவிரதம் தொடங்கினார் பழுத்த காங்கிரஸ்காரரும், காந்தியவாதியுமான தியாகி சங்கரலிங்கனார். அவரது கோரிக்கை அப்போது நிறைவேறவில்லை. உண்ணாவிரதம் இருந்து வந்த சங்கரலிங்கனார், அக்டோபர் 13, 1956 அன்று உயிர் நீத்தார்.
அவரது தியாகம் அடுத்து வந்த திமுக ஆட்சியில்தான் உரிய பலனைக் கண்டது. அவரது தியாகத்தின் காரணமாகவே, மெட்ராஸ் மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் கண்டது. அதை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணாதுரை தலைமையில் அமைந்த முதல் திமுக ஆட்சியில் ஜூலை 18ம் தேதி, 1967ம் ஆண்டு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டுவதாக அறிவித்தார் பேரறிஞர் அண்ணா.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}