ஆடும் பரிவேல் அணி சேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்!

Mar 05, 2025,12:40 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வளர்பிறை சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரம்: 5 .3 .2025 மாசி மாதம் 21ஆம் தேதி வளர்பிறை சஷ்டி திதி.


ஆடும் பரிவேல் அணி சேவல் எனப்

பாடும் பணியே பணியா அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனியானைச் சகோதரனே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

வருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் 

கதியாய் விதியாய்               

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ( கந்தர் அனுபூதி)




ஒவ்வொரு மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். இன்று மாசி 21ஆம் தேதி சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பானதாகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி உண்டு. புதன்கிழமை சஷ்டி திதியில் விரதம் இருந்தால் நினைத்த காரியம் வெற்றி அடையும் .மன உறுதி, மன தெளிவு ,குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு முருகன் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.


சிலர் சஷ்டி விரதம் அந்த நாள் முழுதும் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வருகின்றனர்.


தம் வினைகள், மனக் கவலைகள் எல்லாம் தீர்த்து வைப்பான் குமரன் என்று கடுமையான விரதம் இருப்பவர்கள் இன்றும் இருக்கின்றனர்.


அனைவராலும் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் சஷ்டி திதியான இன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அ,பிஷேகப் பொருட்கள் மலர்களில் செவ்வரளி, நெய் பூஜைக்கான பொருள்கள், நைவேத்தியம் ஏதாவது வீட்டிலிருந்து செய்து எடுத்துக் கொண்டு செல்லலாம்.


காலை மாலை இரு வேலையும் கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம், கந்தர் அனுபூதி ,ஸ்கந்த குரு கவசம் , வேல்மாறல், திருப்புகழ் ,முருகனுக்கு உரிய பாடல்களை கேட்பதும் ,படிப்பதும் செய்வது  சாலச் சிறந்தது.


வீட்டின் பூஜை அறையில்  ஷட்கோண கோலமிட்டு, வேல் வைத்து பூஜை செய்பவர்கள் அபிஷேகம் செய்து ,முருகன் திருவுருவ படத்திற்கு மலர்கள் வைத்து அலங்கரித்து, வெற்றிலை தீபம் ஏற்றி கந்தனை வழிபட கவலைகள் பறந்தோடும்.


நைவேத்தியமாக அவரவர்களுக்கு இயன்ற பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் நாட்டு சர்க்கரை, பழங்கள் ,கற்கண்டு பொங்கல் ,கற்கண்டு முருகனுக்கு சமர்ப்பித்து வழிபடலாம்.


படிப்பு ,வேலை ,தொழில் முன்னேற்றம், நிரந்தர வருமானம், பணப்பிரச்சினை ,குடும்ப அமைதி ,குழந்தை வரம் வேண்டி இந்த விரதம் இருக்க கந்தன் நமக்கு அனைத்து வளங்களும் நலங்களும் அருள் புரிவார்.


வேலுண்டு வினையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்