இன்பத்தில் இணைந்து.. துன்பத்தில் தோள் கொடுத்து.. Happy World Couples day!

May 29, 2025,01:47 PM IST

ஸ்வர்ணலட்சுமி


இன்பத்தில் இணைந்து துன்பத்தில்  தோள் கொடுத்து கடமையில் கண்ணாக இருந்து பிடிவாத குணங்களில் விட்டுக் கொடுத்து உறவுகளுடனும், பிள்ளைகளுடனும் ஒன்றாக கலந்து தாம்பத்திய வாழ்க்கை காண அர்த்தத்தை உணர்ந்து மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து தம்பதியருக்கும் தம்பதியர் தின வாழ்த்துக்கள்.


ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மே 29ஆம் தேதி சர்வதேச தம்பதியர் தினம் கொண்டாடப்படுகிறது. இளம் தம்பதிகள் முதல் வயதில் மூத்த தம்பதியர் வரை அவர்களின் அன்பு, ஒற்றுமை, புரிதல், அக்கறை ,அரவணைப்பு ஆகியவற்றைச் சிறப்பிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


தம்பதியர் தின சிறப்புக்கள்:




இந்த நாள் தம்பதிகளின் உறவில் ஒரு சிறப்பு நாளாக கருதப்படுகிறது. தம்பதிகள் தாங்கள் கடந்து வந்த பாதை கரடு முரடாக இருந்திருக்கலாம் அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து அவர்கள் வாழ்க்கை பாதையில் நடந்த சுவையான, கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு நல்ல புரிதலுடன் அவர்களின் பயண பாதையை திரும்பிப் பார்க்க வைக்கிறது இந்த தம்பதியர் தின நாள்.


பெற்றோர் பார்த்து  நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆனாலும் அல்லது காதல் திருமணம் ஆக இருந்தாலும் தம்பதிகள் இந்த பிறவியில் நாம் கணவன் மனைவி என்ற புரிதலுடன் வாழ்க்கையை துன்பத்திலும் இன்பத்தை தேடி, துன்பத்தை இருவரும் சேர்ந்து கடந்து வரும் பாதையை நினைவுகூர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நாள் இந்த தம்பதியர் தினம்.


தம்பதியர் தினம் எப்படி எல்லாம் கொண்டாடலாம் என்று பார்க்கலாம் அதற்கான வழிகள்:


வேலைக்குச் செல்பவர் தம்பதியர் வீட்டிற்கு வந்ததும் ஒருவருக்கொருவர் வீட்டில் இருந்தபடி அமர்ந்து நேரத்தை செலவிடலாம். அவரவர் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம்.


ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வாழ்த்துக்கள் கூறலாம் .இப்போது தான் கையிலே மெசேஜ் செய்யும் கைபேசி உள்ளது. அதில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். *ஏதேனும் பரிசு பொருட்கள் ஒருவருக்கொருவர் அவரவர் நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசளித்துக் கொள்ளலாம்.


இருவரும் மனம் விட்டு பேசுங்கள் .ஆளுக்கு ஒரு மொபைல் கையில் வைத்துக் கொண்டு பிறர் டைப் செய்த மெசேஜ் பார்ப்பது விட்டு விட்டு நம் வாழ்க்கை துணைக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


இப்போது மாறிவரும் வாழ்க்கை முறையால் பல தம்பதிகளுக்குள் நெருக்கம் குறைகிறது. அதன் வெளிப்பாடாக உறவில் விரிசல் ஏற்படுகிறது.


உறவில் விரிசல் வரும் பொழுது மனக்கசப்புகள் ஏற்படும் நிலை வருகிறது. ஏதேனும் பிரச்சனை ஏற்படும் போது மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இருவரின் பிரச்சனை இருவருடனே இருப்பது நல்லது .நல்ல புரிதலுடன் வாழ்வதே திருமண பந்தம் நினைப்பதற்கான நல்ல ஒரு வழியாகும். வருங்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவது இப்போது உள்ள ஒவ்வொரு தம்பதியருக்கும் உள்ள தலையாய கடமையாகும். இவ்வுலகில் இறைவன் வகுத்த பாதையில் கணவன் மனைவியாக வாழும் தம்பதியர் அனைவருக்கும் தம்பதியர் தின வாழ்த்துக்கள்.


"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று வாழ்த்துவோம் அதற்கு அர்த்தம் :-இறை உணர்வும், அற நெறியும் ,கல்வி, தனம், தானியம், இளமை, வலிவு ,துணிவு ,நன்மக்கட்  பே று, அறிவில் உயர்ந்தோர் நட்பு, அன்புடைமை, அகத்தவம், அழகு ,புகழ், மனித மதிப்பு உணர்ந்து ஒழுகும் பண்பு, பொறையுடைமை, எனும்  பேறு பதினாறும் பெற்று மறை விளக்கும் உயர்வாழ்வை மதித்து ஒழுக்கம் காத்து மனையறத்தின்  ஒளி விளக்காய் வளம் ஓங்கி வாழ்க! என்பதாகும்.


புதுமண தம்பதிகளுக்கு இந்த 16 செல்வங்களும் கிடைக்க பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். மேலும் லைப்ஸ்டைல் பகுதியில்  இணைந்து தொடர்ந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Bharathiraja: பாசத்திற்குரிய பாரதிராஜா.. காலமானார் இயக்குநர் இமயம்.. கண்ணீரில் தமிழ் சினிமா

news

RIP Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

news

தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது

news

இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!

news

இயக்குனர் இமயம் பாரதிராஜா.. அந்த முட்டத்து கடல் அலைகள் கடற்கரை மணல்கள் கண்ணீர் விடுகிறது!

news

பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு

news

சிந்தனைச் சிதறல்.. நின்ற இடத்திலேயே வெல்வது எப்படி?

news

பரம ஏகாதசி.. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஏகாதசி.. பாவங்கள் நீங்கும்

news

Kalaiyarasi Muthuvel Poem: அமிலம் கொட்டினாலும் ஆழ்துளையிட்டாலும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்