world health day.. மலிந்து விட்ட சுகாதாரம்.. எப்படி சரி செய்வது.. நாம் என்ன செய்ய வேண்டும்!

Apr 07, 2024,05:28 PM IST

சென்னை:  உலக சுகாதார நாள்  நாள்  இன்று.. ஆனால் நம்மைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்தால் அச்சச்சோ,, இது நமக்காக படைக்கப்பட்ட பூமியா என்று மலைப்புதான் வருகிறது.


உலக மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்று புறச் சூழலை  காக்க பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டதுதான் உலக சுகாதார நாள். தொழில் நுட்பங்கள் வளர்ந்த இக்காலகட்டத்தில் சுற்றுப்புறச் சூழல் சீர் கேடும் நிறைந்து தான் காணப்படுகிறது.  அது நீர் மாசுபாடாகட்டும் அல்லது காற்று மாசுபாடு ஆகட்டும். இதனால் மனிதர்களுக்கு பல  நோய்கள் உருவாக காரணமாகின்றன.


நீர் மாசுபாடு என்பது பொதுவாக தொழிற்சாலை கழிவுகள் சேர்வதால் உருவாகிறது. காற்று மாசுபாடு இதுவும் பொதுவாக நாம் பயன்படுத்தும் வாகனங்களிருந்து வெளிவரும் புகை தான் காரணம்.  இதனால் நாம் சுவாசிக்கும் காற்று கூட விஷமாகி விடுகிறது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது நாம் ஓவ்வொருவரின்  தலையாய கடமை.




கண்ட இடங்களில் குப்பையை  கொட்டாதீங்க. இயற்கை பொருள்களை அதிகம் பயன்படுத்துங்க. அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த சுகாதார  கேடுகளினால் மனிதர்களுக்கு நோய்கள்தான் இலவசமாக கிடைக்கின்றன.. இதனால் மருத்துவமனைக்குத்தான் அலைய வேண்டியுள்ளது. புதிய புதிய தொழில் நுட்பம் போல புதிய புதிய பெயருடன் கூடிய வியாதிகளும் இன்று அதிகரித்து விட்டன. இது வருங்கால தலை முறையினருக்கும் ஆபத்துதான்.  நாகரீக காலத்தில்  சமுக வலைதளங்களில்தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல இயற்கை மீதும் ஆர்வம் காட்டினால் நன்றாக இருக்கும். 


குறிப்பாக நம் உடல் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தினமும் உடல் பயிற்சி, தியானம், யோகா,   பழக்கத்தை  ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வுதான் மனிதனுக்கு மிகப் பெரிய வரமே. இன்றைய  காலத்தில் அரிது தான். ஏனெனில் மனிதனின் உணவு பழக்க வழக்கமும்  வாழ்க்கை நடை முறைகளும் நிறையவே மாறிப் போய் விட்டன. குறிப்பாக உடம்புக்கு கேடு விளைவிக்க கூடிய புகை, மது , போன்ற பழக்கவழங்களில் பலரும் சிக்கி அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். இதையெல்லாம் நாம் சொன்னால், அறிவுரை சொன்னால், உடனே பூமர்ஸ் லிஸ்டில் வைத்து விடுகிறார்கள் இளைஞர்கள்.  


கடந்த சில வருடங்களில்  உலகமே  பாதிக்கப்பட்டு ஆடிப் போன கொரோனாவைரஸ் போன்ற  நோய்கள் தான்  உலக சுகாதார  சீர்கேடுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. வளரும் தலைமுறைக்கு  சமுக வளைதளங்கள் மட்டும் முக்கியமல்ல. நம் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கனும். சொல்லி கொடுங்க  பெற்றோர்களே..!


கட்டுரை: சுஜித்ரா

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்