காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.. தொட்டுத் தொடரும் சூப்பர் பாரம்பரியம்.. அதாம்லே இந்தியா!

Apr 18, 2024,01:25 PM IST
ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கும், பாரம்பரியம் இருக்கும்.. ஒரு இனத்துக்கே இப்படி என்றால், பல நூறு இனக்குழுக்களை உள்ளடக்கிய மாபெரும் தேசமான இந்தியாவோட பாரம்பரியம் எவ்வளவு பெரிதாக இருக்கும்.. எத்தனை வீரியமாக இருக்கும்.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரவிக் கிடக்கும் மிகப் பெரிய பாரம்பரியத்துக்குச் சொந்தக்கார நாடுதான் இந்தியா.

ஏன் இப்போ இதைப் பத்திப் பேசறோம்னு நினைக்கறீங்களா.. அட, இன்னிக்கு உலக பராம்பரிய தினம்ங்க.. பிறகு பேசாம இருக்க முடியுமா சொல்லுங்க!+

உலகின் செழுமையான கலாச்சாரங்கள், பண்பாடு, கலை, இலக்கிய வரலாறுகளை நினைவு கூறும் தினம்தான் இன்று. நம் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. இமயம் முதல் குமரி வரை வெவ்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள்.. ஆனால் பாருங்க.. வழியெங்கும் ஊடுறுவி ஒட்டிக் கிடக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்.. ஒற்றுமை.. அதுதான் இந்தியாவின் நாடித் துடிப்பே.!



இந்திய கலாச்சரம் உலக மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதெல்லாம் இப்போது அதிகம் வெளியில் தெரியவே, அதிகம் இங்கு நோக்கி வருகிறார்கள். இந்தியாவில் பண்டிகைகள், கொண்டாட்டங்கள், கலைகள், கலாச்சாரத்துக்குக் குறைச்சல் இல்லை. கதக், ஒடிசி, குச்சிபுடி, பரதம், கிராமப்புற நடனங்கள் என்று ஏகப்பட்ட நடனங்கள் இங்கு உள்ளன.  தாண்டியா நடனம் மிகப் பிரபலமானது. அதேபோல விழாக்களுக்கும் பஞ்சமே இல்லை. குஜராத்தில்  நடைபெறும் பட்டம் பறக்கும் விழா , அடுத்து கல்கத்தாவில் ஒன்பது நாள் நடைபெறும் நவராத்ரி, வட இந்தியாவில் பிரபலமான ஹோலி பண்டிகை, கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம், தமிழ்நாட்டின் பொங்கல் விழா .. என சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழர் திருநாள் என கொண்டாடப்படும் பொங்கல்  விழா உலகப் புகழ் பெற்றது. பொங்கல் விழாவின்போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும்  ஐல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கான போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் அத்தம் பத்து அன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கோலமும், படகு போட்டி மற்றும், பராம்பரிய நடனமான கதகளி, மோகினி ஆட்டம், புலி ஆட்டமும் நடை பெறும். 
இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் முடிக்க முடியாது.. நீண்டு கொண்டே போகும்.. நுகர நுகர நம்மை மயக்கும் மலரின் மணம் போலத்தான் நமது நாட்டின் பாரம்பரியமும்.. நமது செழுமையான பராம்பரியத்தை இன்றைய தலை முறையினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.. அதை அவர்கள் புரிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். அதற்கு இந்த நாளையே கூட பயன்படுத்திக்கலாம்.. பாரம்பரியம் போற்றுவோம்.. அதைக் கட்டியும் காப்போம்.

- சுஜித்ரா

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்