காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை.. தொட்டுத் தொடரும் சூப்பர் பாரம்பரியம்.. அதாம்லே இந்தியா!

Apr 18, 2024,01:25 PM IST
ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கும், பாரம்பரியம் இருக்கும்.. ஒரு இனத்துக்கே இப்படி என்றால், பல நூறு இனக்குழுக்களை உள்ளடக்கிய மாபெரும் தேசமான இந்தியாவோட பாரம்பரியம் எவ்வளவு பெரிதாக இருக்கும்.. எத்தனை வீரியமாக இருக்கும்.. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விரவிக் கிடக்கும் மிகப் பெரிய பாரம்பரியத்துக்குச் சொந்தக்கார நாடுதான் இந்தியா.

ஏன் இப்போ இதைப் பத்திப் பேசறோம்னு நினைக்கறீங்களா.. அட, இன்னிக்கு உலக பராம்பரிய தினம்ங்க.. பிறகு பேசாம இருக்க முடியுமா சொல்லுங்க!+

உலகின் செழுமையான கலாச்சாரங்கள், பண்பாடு, கலை, இலக்கிய வரலாறுகளை நினைவு கூறும் தினம்தான் இன்று. நம் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. இமயம் முதல் குமரி வரை வெவ்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், பாரம்பரியங்கள்.. ஆனால் பாருங்க.. வழியெங்கும் ஊடுறுவி ஒட்டிக் கிடக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்.. ஒற்றுமை.. அதுதான் இந்தியாவின் நாடித் துடிப்பே.!



இந்திய கலாச்சரம் உலக மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதெல்லாம் இப்போது அதிகம் வெளியில் தெரியவே, அதிகம் இங்கு நோக்கி வருகிறார்கள். இந்தியாவில் பண்டிகைகள், கொண்டாட்டங்கள், கலைகள், கலாச்சாரத்துக்குக் குறைச்சல் இல்லை. கதக், ஒடிசி, குச்சிபுடி, பரதம், கிராமப்புற நடனங்கள் என்று ஏகப்பட்ட நடனங்கள் இங்கு உள்ளன.  தாண்டியா நடனம் மிகப் பிரபலமானது. அதேபோல விழாக்களுக்கும் பஞ்சமே இல்லை. குஜராத்தில்  நடைபெறும் பட்டம் பறக்கும் விழா , அடுத்து கல்கத்தாவில் ஒன்பது நாள் நடைபெறும் நவராத்ரி, வட இந்தியாவில் பிரபலமான ஹோலி பண்டிகை, கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம், தமிழ்நாட்டின் பொங்கல் விழா .. என சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழர் திருநாள் என கொண்டாடப்படும் பொங்கல்  விழா உலகப் புகழ் பெற்றது. பொங்கல் விழாவின்போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும்  ஐல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கான போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் அத்தம் பத்து அன்று திருவோணம் கொண்டாடப்படுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்கோலமும், படகு போட்டி மற்றும், பராம்பரிய நடனமான கதகளி, மோகினி ஆட்டம், புலி ஆட்டமும் நடை பெறும். 
இந்தியாவின் பாரம்பரியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் முடிக்க முடியாது.. நீண்டு கொண்டே போகும்.. நுகர நுகர நம்மை மயக்கும் மலரின் மணம் போலத்தான் நமது நாட்டின் பாரம்பரியமும்.. நமது செழுமையான பராம்பரியத்தை இன்றைய தலை முறையினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.. அதை அவர்கள் புரிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். அதற்கு இந்த நாளையே கூட பயன்படுத்திக்கலாம்.. பாரம்பரியம் போற்றுவோம்.. அதைக் கட்டியும் காப்போம்.

- சுஜித்ரா

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்