சர்வதேச புரத தினம் (World protein day).. இன்று முதல் இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க.. ஓகேவா!

Feb 27, 2025,01:24 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சர்வதேச புரத தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. புரத உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் உட்கொள்ள வேண்டிய உணவு புரதம் நிறைந்த உணவாகும். புரதம் அதிகம் உள்ள உணவை உட்கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும். ஆனால் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் புரதம் அதிகம் இருப்பதில்லை. இதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச புரத தினம்  கொண்டாடப்படுகிறது.


புரத தினத்தின் வரலாறு:




புரதத்தை பற்றிய முதல் குறிப்பு 1838 இல் டச்சு வேதியியலாளர்  ஜெரார்டஸ் ஜோஹன்னாஸ் முல்டர் முதன் முறையாக புரதங்களை பற்றி விவரித்தார். 1956 ஆம் ஆண்டு புரதத்தின் அணு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 1980ல் எடை இழப்பு மற்றும் தசை அதிகரிப்பு நன்மைக்காக பிரபலம் ஆனது.


2010ல் புரதச்சத்துக்களின் விநியோகம் மற்றும் தேவைகளின் ஒரு எழுச்சி ஏற்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேசிய புரத தினம் கொண்டாடப்பட்டது. இது ரைட் டு ப்ரோட்டீன் என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.  புரத உட்கொள்ளல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி கவுன்சிலால் தொடங்கப்பட்டது.


புரத சத்தின் முக்கியத்துவம்:


புரதம்- மேக்ரோ நியூட்ரியன்ட  உடலின் ஒரு கட்டுமான பொருளாகும். நோய் எதிர்ப்பு சக்தி, தசை வளர்ச்சி ,எலும்பு ஆரோக்கியம் ,திசுக்கள், ஹார்மோன்களுக்கு மற்றும் நொதிகளுக்கு நன்மை பயக்கும். சர்வதேச புரத தினம் புரதம் உட்கொள்ளும் முக்கியத்துவத்தை மக்களுக்கு கற்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


புரதம் அதிகம் உள்ள உணவுகள்:




- பருப்பு வகைகள்

- முளைகட்டிய பயறு வகைகள்

- ட்ரை நட்ஸ் பாதாம் பிஸ்தா போன்றவை

- முட்டை, பால், ப்ரோக்கோலி, காலிஃப்ளவர்

- மீன் ,கோழி இறைச்சி

- சோயா, பொருட்கள், பன்னீர், tofu அவகோடா, கீரை வகைகள், பீன்ஸ், பச்சை பட்டாணி, நாட்டுக்கடலை போன்றவை ஆகும்.


நம் அன்றாட வாழ்க்கை முறையில் தினசரி இந்த உணவில் ஐந்தாவது இடம்பெற வேண்டும். அதனை சரியான அளவில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வாழ்வோமாக.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

news

'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!

news

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்