சென்னை: சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே மார்ச் 2 முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த ரயிலில் கழிவறை வசதி இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் கோயில்கள், சுற்றுலா தளங்கள், சொந்த ஊர்கள் போன்ற இடங்களுக்கு சென்று தங்களின் கோடை விடுமுறைகளை கழித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்த கோடை விடுமுறை காலத்தில் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் ரயில்கள் இயக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து 19 வருடங்களுக்குப் பிறகு சென்னை பீச் டூ திருவண்ணாமலை வரை மே 2 முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படுகிறது. இரவு 12:5 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல மறுமார்க்கமாக அதிகாலை அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு சென்னை பீச்சுக்கு 9:50 மணிக்கு சென்றடைகிறது.
மொத்தம் 12 பெட்டிகளை கொண்ட இந்த மின்சார ரயிலின் பயண நேரம் சுமார் ஆறு மணி நேரம் ஆகும். பயண கட்டணம் ரூபாய் 50 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சென்னை பீச் - திருவண்ணாமலை இடையிலான இந்த ரயிலின் பயண கட்டணம் குறைவாக இருப்பதாலும், ஆறு மணி நேரத்தில் போய் விடலாம் என்பதாலும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேசமயம், இந்த ரயிலில் கழிப்பறை வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை - சென்னை பீச் மற்றும் சென்னை பீச் - திருவண்ணாமலை ஆகிய இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும் ரயிலில், கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் மின்சார ரயில்களில் விரைவில் கழிவறை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், மின்சார ரயில்களை பொறுத்தவரையில் கழிவறை வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஐ.சி.எப் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கழிவறையுடன் கூடிய மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணியும் பெரம்பூர் ஐ.சி.எப் பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த மின்சார ரயில்களில் கழிவறை வசதிகள் பணி நிறைவடைந்த உடன் விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}