சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்க சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் சுங்க கட்டணம் உயர்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்க சாவடிகளில் மட்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள வானரகம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டரைபெரும் புதூர், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வகை வாகனங்களை பொறுத்து ரூபாய் ஐந்து முதல் 25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதக்குடி சுங்கச்சாவடியில் இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சுங்க கட்டணம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த சுங்க கட்டணம் உயர்வு எதிரொலியால் விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}