சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்க சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் சுங்க கட்டணம் உயர்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.
அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்க சாவடிகளில் மட்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள வானரகம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டரைபெரும் புதூர், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வகை வாகனங்களை பொறுத்து ரூபாய் ஐந்து முதல் 25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதக்குடி சுங்கச்சாவடியில் இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சுங்க கட்டணம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த சுங்க கட்டணம் உயர்வு எதிரொலியால் விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}