சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்க சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ஆம் தேதிகளில் சுங்க கட்டணம் உயர்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்க சாவடிகளில் மட்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி சுங்க கட்டணம் உயர்கிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள வானரகம், சூரப்பட்டு, நல்லூர், பரனூர், பட்டரைபெரும் புதூர், ஆத்தூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வகை வாகனங்களை பொறுத்து ரூபாய் ஐந்து முதல் 25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அதேபோல் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள பூதக்குடி சுங்கச்சாவடியில் இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை சுங்க கட்டணம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த சுங்க கட்டணம் உயர்வு எதிரொலியால் விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}