திண்டுக்கல்: அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ரூபாய் 25 ஆக குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரும்பாலும் மழைக் காலங்களில் தக்காளியின் விலை அதிகமாகவே காணப்படும். ஏனெனில் மழை நேரத்தில் வரத்து குறைவதால் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும். இதனால் பல வீடுகளிலும் தக்காளி சட்னி இருக்காது. தக்காளி சட்னி இல்லாமல், வாய்க்கு ருசியாகவே சாப்பிட முடியலையே என பலரும் ஏக்கமாக கூறுவது உண்டு. ஆனால் இந்த நிலை தற்போது மாறி சந்தைகளில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில வாரமாக மழை பெய்து வந்தது. இதனால் வத்தலகுண்டு சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால் மக்கள் அன்றாட பொருட்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் தற்போது உள்ளூரிலிருந்து தக்காளியின் வரத்து அதிகரித்து உள்ளது. இதுதவிர ஆந்திர மாநிலத்திலும் இருந்தும் அதிக அளவு தக்காளி இறக்குமதி செய்யப்படுவதால் உள்ளூர் சந்தைகளில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை அதிரடியாக குறைந்து தற்போது ஒரு கிலோ தக்காளி விலை 25 முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் 27 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 350 முதல் 450 வரை விற்பனையாகிறது.
சந்திகளில் வரத்து அதிகரித்து தக்காளியின் விலை கணிசமாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}