சென்னை: தக்காளி விலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் கிலோவுக்கு ரூ. 25 வரை அதிகரித்து தற்போது சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை ஒரு கட்டத்தில் மிகக் கடுமையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலையைத் தாண்டி உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை இறங்கி நார்மல் ஆனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையில் சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனையாகிறது. 2 நாட்களில் ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணம், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததுதான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டதே வரத்துக் குறைவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது கோயம்பேட்டில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 35க்கும், நவீன் தக்காளி எனப்படும் பெங்களூரு தக்காளி ரூ. 40க்கும் விற்பனையாகின்றன. சில்லறைக் கடைகளில் ரூ. 50, 60 என்ற அளவில் இந்த தக்காளி விற்பனையாகிறது. மழை குறைந்து விளைச்சல் பாதிப்பும் குறைந்தால் மட்டுமே தக்காளி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}