சென்னை: தக்காளி விலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் கிலோவுக்கு ரூ. 25 வரை அதிகரித்து தற்போது சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை ஒரு கட்டத்தில் மிகக் கடுமையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலையைத் தாண்டி உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை இறங்கி நார்மல் ஆனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையில் சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனையாகிறது. 2 நாட்களில் ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணம், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததுதான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டதே வரத்துக் குறைவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது கோயம்பேட்டில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 35க்கும், நவீன் தக்காளி எனப்படும் பெங்களூரு தக்காளி ரூ. 40க்கும் விற்பனையாகின்றன. சில்லறைக் கடைகளில் ரூ. 50, 60 என்ற அளவில் இந்த தக்காளி விற்பனையாகிறது. மழை குறைந்து விளைச்சல் பாதிப்பும் குறைந்தால் மட்டுமே தக்காளி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
{{comments.comment}}