தக்காளி விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு கிலோ ரூ.60.. அப்படீன்னா சட்னிக்கு ஆப்பா!

Jul 22, 2025,07:04 PM IST

சென்னை: தக்காளி விலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் கிலோவுக்கு ரூ. 25 வரை அதிகரித்து தற்போது சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு விற்கப்படுகிறது.


தக்காளி விலை ஒரு கட்டத்தில் மிகக் கடுமையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலையைத் தாண்டி உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை இறங்கி நார்மல் ஆனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது.




சென்னையில் சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனையாகிறது. 2 நாட்களில் ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணம், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததுதான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டதே வரத்துக் குறைவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.


தற்போது கோயம்பேட்டில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 35க்கும், நவீன் தக்காளி எனப்படும் பெங்களூரு தக்காளி ரூ. 40க்கும் விற்பனையாகின்றன. சில்லறைக் கடைகளில் ரூ. 50, 60 என்ற அளவில் இந்த தக்காளி விற்பனையாகிறது. மழை குறைந்து விளைச்சல் பாதிப்பும் குறைந்தால் மட்டுமே தக்காளி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அழகு மயில்!

news

என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)

news

மதியொளி முகமோ!

news

குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்