சென்னை: தக்காளி விலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் கிலோவுக்கு ரூ. 25 வரை அதிகரித்து தற்போது சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலை ஒரு கட்டத்தில் மிகக் கடுமையாக உயர்ந்து பெட்ரோல், டீசல் விலையைத் தாண்டி உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை இறங்கி நார்மல் ஆனது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தக்காளி விலை உயரத் தொடங்கியுள்ளது.

சென்னையில் சில்லறைக் கடைகளில் கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனையாகிறது. 2 நாட்களில் ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணம், சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததுதான் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அண்மையில் பெய்த மழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டதே வரத்துக் குறைவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது கோயம்பேட்டில் நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 35க்கும், நவீன் தக்காளி எனப்படும் பெங்களூரு தக்காளி ரூ. 40க்கும் விற்பனையாகின்றன. சில்லறைக் கடைகளில் ரூ. 50, 60 என்ற அளவில் இந்த தக்காளி விற்பனையாகிறது. மழை குறைந்து விளைச்சல் பாதிப்பும் குறைந்தால் மட்டுமே தக்காளி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
Tamil Poem: மருதாணி!
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}