கவர்னரையே மிரள வைத்த "தக்காளி".. லிஸ்ட்டை விட்டு தூக்குங்க முதல்ல!!

Aug 04, 2023,10:52 AM IST
சண்டிகர் : தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் ராஜ்பவனில் தயாரிக்கும் உணவுகளில் இனி தக்காளி பயன்பாட்டை குறைக்கும்படி பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ கடந்துள்ளது. இதனால் ராஜ்பவன் மெனுவில் இனி தக்காளி உபயோகத்தை குறைக்கும் படி தெரிவித்துள்ளார். அதோடு மக்களும் தக்காளி உபயோகிப்பதை குறைத்து, அதற்கு மாற்றத்தை தேட வேண்டும். இவ்வாறு செய்தால் தக்காளி விலை தானாக குறையும் என தெரிவித்துள்ளார்.



உணவு பொருட்களின் விலை ஏற்றம் மக்களிடம் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மக்களிடம் கேட்டறிந்தார். அதற்கு பிறகு பேசிய அவர், தக்காளி பயன்பாட்டை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும். தேவை குறையும் போது தானா விலை குறைந்து விடும். மக்கள் தக்காளிக்கு மாற்றான விஷயங்களை நாடலாம் என்றார். 

மேலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது என்றால் மக்கள் அதை வீட்டிலேயே விளைய வைக்கலாம். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தலாம். யாருமே தக்காளி சாப்பிடவில்லை என்றால், வாங்குவதற்கு ஆள் இருக்க மாட்டார்கள். இதனால் விலை தன்னால் குறைந்து விடும். எந்த ஒரு பொரும் விலை உயர்கிறதோ அதற்கு மாற்றை தேடினாலே அந்த பொருளின் விலை குறைந்து விடும் என்றார்.

தமிழ்நாட்டில் எச். ராஜா, உத்தரப் பிரதேச பெண் அமைச்சர் ஒருவர் ஆகியோரும் ஏற்கனவே தக்காளியை பயன்படுத்தாமல் விட்டாலே விலை தானாக குறையும் என்று கூறியிருந்தனர். இந்த வரிசையில் தற்போது ஆளுநர் பன்வாரிலாலும் தக்காளி பயன்பாட்டைக் குறைக்குமாறு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்