திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் தொடர் கனமழை எதிரொலியால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி விலை தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் தக்காளி சந்தை மிகவும் பிரபலமானது.
அங்குள்ள கடவூர், காக்காய கவுண்டனூர், புத்தூர், மலைப்பட்டி, தென்னம்பட்டூர், மம்பனியூர், வடமதுரை கொம்பேறிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்புறத்தில் இருந்து இந்த அய்யலூர் சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படுகின்றன. இந்த சந்தையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு வரை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் 100 டன் வரை தினசரி இந்த சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படும். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையால் தக்காளி சேதம் அடைந்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளியின் விலை ₹5 க்கு விற்பனையானது.
ஆனால் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ₹40 ஆக உயர்ந்துள்ளது.
இப்பகுதிகளில் வரும் நாட்களில் மழை தொடர்ந்து பெய்தால் மேலும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}