திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் தொடர் கனமழை எதிரொலியால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி விலை தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் தக்காளி சந்தை மிகவும் பிரபலமானது.
அங்குள்ள கடவூர், காக்காய கவுண்டனூர், புத்தூர், மலைப்பட்டி, தென்னம்பட்டூர், மம்பனியூர், வடமதுரை கொம்பேறிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்புறத்தில் இருந்து இந்த அய்யலூர் சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படுகின்றன. இந்த சந்தையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு வரை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் 100 டன் வரை தினசரி இந்த சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படும். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையால் தக்காளி சேதம் அடைந்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளியின் விலை ₹5 க்கு விற்பனையானது.
ஆனால் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ₹40 ஆக உயர்ந்துள்ளது.
இப்பகுதிகளில் வரும் நாட்களில் மழை தொடர்ந்து பெய்தால் மேலும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}