திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் தொடர் கனமழை எதிரொலியால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கடந்த வாரம் கிலோ ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி விலை தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் தக்காளி சந்தை மிகவும் பிரபலமானது.
அங்குள்ள கடவூர், காக்காய கவுண்டனூர், புத்தூர், மலைப்பட்டி, தென்னம்பட்டூர், மம்பனியூர், வடமதுரை கொம்பேறிபட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்புறத்தில் இருந்து இந்த அய்யலூர் சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படுகின்றன. இந்த சந்தையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவு வரை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் 100 டன் வரை தினசரி இந்த சந்தைக்கு தக்காளி கொண்டுவரப்படும். ஆனால் தற்போது பெய்து வரும் கனமழையால் தக்காளி சேதம் அடைந்ததால் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இந்த நிலையில் அய்யலூர் சந்தையில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளியின் விலை ₹5 க்கு விற்பனையானது.
ஆனால் தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ₹40 ஆக உயர்ந்துள்ளது.
இப்பகுதிகளில் வரும் நாட்களில் மழை தொடர்ந்து பெய்தால் மேலும் தக்காளியின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் கவலைத் தெரிவித்து வருகின்றனர்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}