மகளை உட்கார வைத்து .. 51 கிலோ தக்காளி.. அசர வைத்த அனகாபள்ளி துலாபாரம்!

Jul 21, 2023,11:49 AM IST
- பூஜா

விசாகப்பட்டனம்:  தக்காளி தங்கம் கணக்கா விக்கிற நிலைமையில தங்களோட பொண்ணோட எடைக்கு சமமா தக்காளியில் துலாபாரம் கொடுத்து அசத்தி இருக்காங்க ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர்.

நாட்டுல தக்காளிக்கான மவுசு கூடுனதுல இருந்தே, 'காய்' அப்டின்னு பல பேரால நினைக்கப்படுற இந்த 'பழம்', தள்ளுபடி, பரிசுல இருந்து திருட்டு, திருமண விரிசல், ஹைஜேக்கிங், கொலை னு ஏகப்பட்ட விஷயத்துக்காக சமீப காலமா நியூஸையும் நம்மையும் சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கு. 

அந்த வரிசையில இப்போ ஆந்திரா மாநிலத்தில ஸ்ரீ நூகாம்பிகா அம்மாவரி கோயில்ல நடத்தப்பட்ட 'தக்காளி துலாபாரம்' எல்லாரையும் ஆச்சார்யபட வெச்ச ஒரு புதுமையான சம்பவம். வருஷா வருஷம் காய்கறிகள் மற்றும் வெல்லத்தை வெச்சு துலாபாரம் செய்றத வழக்கமா கொண்ட ஜக்க அப்பா ராவ் மற்றும் மோஹினி தம்பதியினர் இந்த வருஷம் இப்போதைய சூழலுக்கு ஏத்த மாதிரி ஒரு டிவிஸ்ட கொண்டு வந்துருக்காங்க. 



ஒரு கிலோ தக்காளி சுமார் 150ல இருந்து 200 ரூபாய் வரைக்கும் விஸ்வரூப விலையில் வெளுத்து வாங்கி மலைக்க வைத்துள்ள நிலையில், அவங்களோட பொண்ணு பவிஷ்யாவோட எடைக்கு ஈடா 51 கிலோ தக்காளியை துலாபாரம் கொடுத்திருக்காங்க. இதுக்கு ஒரு காரணம் இருக்கு. அதாவது தானமா கொடுக்கப்பட்ட இந்த தக்காளிய அன்னதானத்துல சேர்த்து இந்த சூழல்ல கூட பக்தர்கள் மனசார எந்த குறையும் இல்லாம கோயில்ல பிரசாதம் சாப்பிடனும் அப்டிங்கிறதுதான்தான் எங்களோட நோக்கம்னு சொல்றாங்க இந்த தம்பதி. 

வழக்கமா துலாபாரம் செய்ய பக்தர்கள் அனகாபள்ளியில் பிரபலமான வெல்லம், சக்கரை, அரிசி, தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை தருவார்கள். வசதியானவர்கள் என்றால் வெள்ளி நாணயம், தங்க நாணயம், நகைகள் அப்டின்னு செய்வாங்க. ஆனால் இவங்க வித்தியாசமாக தக்காளியை தானமாக கொடுத்திருக்காங்க. தினசரி அன்னதானம் நடக்கும் ஸ்ரீ நூகாம்பிகா அம்மாவரி கோயில்ல அடுத்த கொஞ்ச நாளைக்கு தக்காளிக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.  என்ன இந்த தக்காளி அழுகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழக்கமாக தக்காளியை வைத்து தொக்கு செய்யலாம்.. குழம்பில் போடலாம்.. சட்னி கூட அரைச்சு இட்லியைத் தொட்டு சாப்பிடலாம்.. பட் தக்காளியை வைத்து துலாபாரம் கொடுப்பதெல்லாம்.. நிச்சயம் வேற லெவல் கிரியேட்டிவிட்டிதான்!

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்