கண்ணீரை வரவழைக்கும் தக்காளி விலை.. ரூ.250ஐ தாண்டிருச்சு!

Aug 04, 2023,12:54 PM IST
டெல்லி : தக்காளி விலை ரூ. 250 ஐத் தொட்டு விட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ன சமைப்பது என்று தெரியாமல் அப்படியே அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர்.

தக்காளி விலை நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. தக்காளி விலை ஏற்றத்தை பார்த்து அதற்கு "சிவப்பு தங்கம்" என்றே பெயர் வைத்து விட்டனர்.



பெட்ரோல், டீசல் விலையை தாண்டி, தற்போது தங்கத்துடன் போட்டி போடும் அளவிற்கு தான் தக்காளி விலை சென்று கொண்டிருக்கிறது. தலைநகர் டில்லியின் பல பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.250 யும் கடந்து விட்டது. இன்னும் இரண்டு வாரங்களுக்கு இதே ரேஞ்சில் தான் இருக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒரு புறம் நடவடிக்கை எடுத்து வந்தாலும், மற்றொரு புறம் டில்லியில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தக்காளி விலை குறையாமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக அரியானா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பெய்த தொடர் கனமழை, கோலாரில் செடிகளில் புதிய நோய் பரவுவது போன்றவற்றால் தக்காளி விளைச்சல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் விலை குறையாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

மத்திய அரசின் வாடிக்கையாளர் விகாரங்களுக்கான அமைச்சகம் கண்காணித்த விலை ஏற்றத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் தக்காளி உள்ளிட்ட 22 அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த பொருட்களில் உச்சத்தில் இருப்பது தக்காளி விலை தான் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்