மஞ்சப் பையை எடுக்காதீங்க.. ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை: எதற்காக தெரியுமா?

Nov 24, 2023,01:26 PM IST

சென்னை:  தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேசன்கடைகள் அனைத்தும் விடுமுறை இன்றி இயங்கின. அதை சரிக் கட்டும் விதமாக நாளை ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ம் தேதி  முதல் நவம்பர் 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகளும் விடுமுறை இல்லாமல் இயங்கின. தீபாவளி பண்டிகையின் போது  அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வார விடுமுறை நாட்களிலும்  அனைத்து ரேசன்கடைகளும் செயல்பட உணவுத்துறை உத்தரவிட்டிருந்தது. 




அந்த  விடுமுறை பின்னர் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை இன்றி வேலை செய்ததற்காக நவம்பர் 13, 25 ம் தேதிகளில் ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  கடந்த 13ம் தேதி அன்று ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளை நவம்பர் 25ம் தேதி  ரேசன்  கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மஞ்சப் பைகளுடன் நாளை கடைகளுக்குக் கிளம்பி விடாதீர்கள் மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்