சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேசன்கடைகள் அனைத்தும் விடுமுறை இன்றி இயங்கின. அதை சரிக் கட்டும் விதமாக நாளை ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகளும் விடுமுறை இல்லாமல் இயங்கின. தீபாவளி பண்டிகையின் போது அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வார விடுமுறை நாட்களிலும் அனைத்து ரேசன்கடைகளும் செயல்பட உணவுத்துறை உத்தரவிட்டிருந்தது.

அந்த விடுமுறை பின்னர் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை இன்றி வேலை செய்ததற்காக நவம்பர் 13, 25 ம் தேதிகளில் ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 13ம் தேதி அன்று ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளை நவம்பர் 25ம் தேதி ரேசன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மஞ்சப் பைகளுடன் நாளை கடைகளுக்குக் கிளம்பி விடாதீர்கள் மக்களே!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}