மஞ்சப் பையை எடுக்காதீங்க.. ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை: எதற்காக தெரியுமா?

Nov 24, 2023,01:26 PM IST

சென்னை:  தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேசன்கடைகள் அனைத்தும் விடுமுறை இன்றி இயங்கின. அதை சரிக் கட்டும் விதமாக நாளை ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ம் தேதி  முதல் நவம்பர் 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகளும் விடுமுறை இல்லாமல் இயங்கின. தீபாவளி பண்டிகையின் போது  அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வார விடுமுறை நாட்களிலும்  அனைத்து ரேசன்கடைகளும் செயல்பட உணவுத்துறை உத்தரவிட்டிருந்தது. 




அந்த  விடுமுறை பின்னர் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை இன்றி வேலை செய்ததற்காக நவம்பர் 13, 25 ம் தேதிகளில் ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  கடந்த 13ம் தேதி அன்று ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளை நவம்பர் 25ம் தேதி  ரேசன்  கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மஞ்சப் பைகளுடன் நாளை கடைகளுக்குக் கிளம்பி விடாதீர்கள் மக்களே!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்