டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

May 23, 2025,05:07 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளில் குரூப் 4 தேர்விற்கு கல்வி தகுதி 10ம் வகுப்பு என்பதால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர்.  இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.




அதில் விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


இருப்பினும் மே 24 சனிக்கிழமை நள்ளிரவு 11:59 வரை டிஎன்பிசி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்ய மே 29 முதல் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்-4 தேர்வுகள் ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12 .30 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்