டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

May 23, 2025,05:07 PM IST

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக பல்வேறு பிரிவுகளில் போட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த தேர்வுகளில் குரூப் 4 தேர்விற்கு கல்வி தகுதி 10ம் வகுப்பு என்பதால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர்.  இந்த தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935 பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 25ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.




அதில் விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசி நேரத்தில் விண்ணப்பம் செய்யும்போது இணைய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


இருப்பினும் மே 24 சனிக்கிழமை நள்ளிரவு 11:59 வரை டிஎன்பிசி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்ய மே 29 முதல் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்-4 தேர்வுகள் ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் 12 .30 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்