கடல் ஒரே சீற்றமாக இருக்கிறது.. தனுஷ்கோடி செல்லக் கூடாது.. சுற்றுலா பயணிகளுக்கு தடை!

May 23, 2024,01:20 PM IST
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். மேலும், இங்கு வரும் பயணிகள் புகழ்மிக்க ராமநாதசாமி கோவில், அக்னி தீர்த்தம், ராமர் பாதம் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர். 



அதிலும், ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி  பார்க்கும் இடம் தனுஷ்கோடி. இந்தியாவின் கடைசி நிலப்பரப்பாகும்.  பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் இது. பாம்பனுக்கு தென்கிழக்கே, ராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் நினைவு சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்கு ஏராளமானோர் குவிந்தனர். அப்போது திடீர் என அப்பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி வருகின்றனர். இந்த பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின்னர், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்