சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பாதிப்படைந்திருந்த, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான ரயில் போக்குவரத்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி இரும்புக் கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே, ரயில் வந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10த்திற்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதனால் அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது.
சரக்கு ரயில்கள் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சரக்கு ரயில் தடம்புரண்டதால் சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இடையிலான ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.

இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இடையான மின்சார ரயில் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது. அத்துடன் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தன. இதன் விளைவாக தற்போது தடம் புரண்ட பெட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டன. தண்டவாளமும் சரி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து செங்கல்பட்டு - கடற்கரை இடையிலான ரயில் போக்குவரத்து சீராகியுள்ளது. வழக்கம் போல ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}