மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து.. எதற்கு தெரியுமா?

Aug 26, 2024,03:57 PM IST

குன்னூர்: தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் சேவை வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடமாக நீலகிரி திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருதால், மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட காரணங்களால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம்-உதகை இடையே கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.



அதன்பின்னர் பாதைகள் சரி செய்யப்பட்டு கடந்த 6ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.இதனை அடுத்து கல்லாறு ஹில் குரோவ் இடையே தண்டவாளத்தின் பராமரிப்பு பணிக்காக மீண்டும் ரயில் சேவை 25ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றம், தொடர் மழை, ரயில் பாதையில் மண் சரிவு, பாதைகளில் பாறைகள் உருண்டு விழுதல் உள்ளிட்ட காரணங்களால் மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை ரத்து வருகின்ற 31ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்