டில்லி : ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. நவம்பர் 01ம் தேதியில் இருந்து இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
ரயில் பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான டிக்கெட்களை 120 நாட்களுக்கு முன்பே புக் செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படி புக் செய்ய முடியாதவர்கள், டிக்கெட் கிடைக்காதவர்கள் பயண தேதிக்கு முந்தைய நாள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 160 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்களை புக் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.

இதனால் பலரும் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்து விடுவதால் பெரும்பாலானவர்கள் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பயணிகளின் இந்த சிரகமத்தை குறைப்பதற்காக, ரயில் டிக்கெட் முன் கூட்டியே புக் செய்வதற்கான கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது மத்திய ரயில்வே துறை. இந்த புதிய நடைமுறை நவம்பர் 01ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்திய பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு அவகாசம் மட்டும் தான் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் வெளிநாட்டு பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான கால அவகாசம் 365 நாட்கள் என்ற நிலையே தொடரும். அதில் மாற்றமில்லை என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}