சென்னை: சென்னையில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பஸ், மின்சார ரயில், போருந்துகளில் பயணிக்கும் பொது மக்கள் ஒவ்வொன்றிற்கும் தனி தனியாக டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். இதனை எளிமைப்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தனியாக ஒரு செயலியை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி இருந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் புதிய செயலியை அடுத்த மாதம் இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல வேண்டும் எந்த வகை போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பயணிகள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}