காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை: மரங்கள் மாநாட்டில் தவெகவை தாக்கி பேசிய சீமான்

Aug 30, 2025,04:36 PM IST

சென்னை: காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடன், ஒரு அணில்கூட கண்ணில்படவில்லை. அந்த அணில்களுக்கும் சேர்த்து காடு வளர்க்கதான் நாம் பாடுபடுகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார். கடந்த ஜூலை 10ம் தேதி மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் ஆடு மற்றும் மாடுகள் மாநாடு நடத்தினார்.




ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்! என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடத்தினார். இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக  மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நம்மாழ்வார், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், நகைச்சுவை நடிகர் விவேக் உட்பட பலரின் நினைவாக மலரஞ்லி செலுத்தப்பட்டு, மரக் கன்றுகளை நட்டார்  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 


அதன்பின்னர் அவர் பேசுகையில், காட்டுக்குள் புலிகள் நுழைந்தவுடன், ஒரு அணில்கூட கண்ணில்படவில்லை. அந்த அணில்களுக்கும் சேர்த்து காடு வளர்க்கதான் நாம் பாடுபடுகிறோம். மரங்களுக்கு என்ன மாடு இவர்களுக்கு என்ன மறை கழன்று விட்டதா? என்று கேட்பார்கள். மறையை கற்றதால் தான் இந்த மாநாடு. வாக்குக்காக நிற்பவர்கள் இதை நினைத்து கூட பார்க்க மாட்டார். மக்களின் வாழ்க்கைக்காக நிற்பவர்களால் தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். தண்ணீரை தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பாளர்கள். டெல்லியை போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும்  என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்