காணம் பாடிடும் வானம்பாடியாக இரு.. அண்ணாவை "கோட்" செய்து தினகரன் டிவீட்!

Feb 09, 2023,12:14 PM IST
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மேற்கோள் காட்டி அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் டிவீட் போட்டுள்ளார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிமுக வாக்குகளை எந்த அளவுக்குப் பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அத்தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு அவர் கோரிய குக்கர் சின்னம் ஒதுக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த தினகரன், தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அறிவித்து விட்டார். வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த இன்று, அமமுக வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது. போதுமான அளவில் முன்மொழிவோர் யாரும் மனுவுடன் இல்லாததால், மனு தள்ளுபடியாகி விட்டது.

இந்த நிலையில் தனது கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையில் டிடிவி தினகரன் டிவீட் போட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி அவரது இந்த டிவீட் அமைந்துள்ளது. இந்த டிவீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தம்பி அவர்கள் எத்தனை இழிமொழி உமிழ்ந்திடினும் !  நாம் நம் தரம் குறையாமல் சொல்லையும் செயலையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எருமைகள் சேற்றில் புரளும் - அதனை கண்டும் ஆறறிவினர்  அருவியில்தான் நீராடுகின்றனர் கழுகு அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்கிறது.

ஆனால் கிளி கொவ்வைக் கணியைத்தான் விரும்புகிறது ! புளித்த காடியைப் பருகுவான் குடிகாரன் ; செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய இழிமொழி பேசிடினும் தம்பி நீ காணம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். 

பண்பு மறந்து கண்ணியமற்று காழ்ப்புக் காரணமாக என்னென்ன இழிமொழி பேசுகின்றனர் என்பதை எண்ணிடும்போது தம்பி !  நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் வெற்றி கிடைத்திட மேலும் உறுதியும் ஊக்கமும் பெற்றுக் கொள்ள வேண்டும். 

யாராரோ வீசிடும் இழிமொழிகளை பழிச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டுதான் ஆகவேண்டுமா அண்ணா ! என்று கேட்டால் தம்பி தயக்கமின்றி சொல்லுவேன் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் ! நாட்டுக்கு நல்லாட்சி அமைத்திட நாம் இந்த விலை கொடுத்தாக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்