காணம் பாடிடும் வானம்பாடியாக இரு.. அண்ணாவை "கோட்" செய்து தினகரன் டிவீட்!

Feb 09, 2023,12:14 PM IST
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மேற்கோள் காட்டி அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் டிவீட் போட்டுள்ளார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அமமுக போட்டியிடும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிமுக வாக்குகளை எந்த அளவுக்குப் பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அத்தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு அவர் கோரிய குக்கர் சின்னம் ஒதுக்கப்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த தினகரன், தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அறிவித்து விட்டார். வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த இன்று, அமமுக வேட்பாளரின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது. போதுமான அளவில் முன்மொழிவோர் யாரும் மனுவுடன் இல்லாததால், மனு தள்ளுபடியாகி விட்டது.

இந்த நிலையில் தனது கட்சியினருக்கு உற்சாகம் தரும் வகையில் டிடிவி தினகரன் டிவீட் போட்டுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி அவரது இந்த டிவீட் அமைந்துள்ளது. இந்த டிவீட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தம்பி அவர்கள் எத்தனை இழிமொழி உமிழ்ந்திடினும் !  நாம் நம் தரம் குறையாமல் சொல்லையும் செயலையும் அமைத்துக்கொள்ள வேண்டும். எருமைகள் சேற்றில் புரளும் - அதனை கண்டும் ஆறறிவினர்  அருவியில்தான் நீராடுகின்றனர் கழுகு அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்கிறது.

ஆனால் கிளி கொவ்வைக் கணியைத்தான் விரும்புகிறது ! புளித்த காடியைப் பருகுவான் குடிகாரன் ; செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய இழிமொழி பேசிடினும் தம்பி நீ காணம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். 

பண்பு மறந்து கண்ணியமற்று காழ்ப்புக் காரணமாக என்னென்ன இழிமொழி பேசுகின்றனர் என்பதை எண்ணிடும்போது தம்பி !  நாம் மேற்கொண்டுள்ள காரியத்தில் வெற்றி கிடைத்திட மேலும் உறுதியும் ஊக்கமும் பெற்றுக் கொள்ள வேண்டும். 

யாராரோ வீசிடும் இழிமொழிகளை பழிச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டுதான் ஆகவேண்டுமா அண்ணா ! என்று கேட்டால் தம்பி தயக்கமின்றி சொல்லுவேன் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும் ! நாட்டுக்கு நல்லாட்சி அமைத்திட நாம் இந்த விலை கொடுத்தாக வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்