இது காட்டுமிராண்டி தனம்.. கைது செய்யும் அளவிற்கு மகாவிஷ்ணு தவறு செய்யலை.. டிடிவி தினகரன்

Sep 11, 2024,05:38 PM IST

சென்னை: இது காட்டுமிராண்டி தனமானது. கைது செய்யும் அளவிற்கு மகாவிஷ்ணு பெரிய தவறு செய்யவில்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

மகாவிஷ்ணு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. போன பிறவியில் செய்த பாவத்தால்தான் இந்தப் பிறவியில் கண் தெரியாமல் கால் கை இல்லாமல் பிறக்கிறார்கள். நோய்களால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் இவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


மகாவிஷ்ணு மீது போலீசில் புகார்கள் குவிந்ததால், அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் அழைத்து வந்து கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது போலீஸ்.  மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.




இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், திமுக எப்பவுமே இரட்டை வேடம் போடுகின்ற கட்சி. திருக்குறள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பொதுமறையான நூல். ஆத்திகர்கள் நாத்திகர்கள் என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல். அந்த திருக்குறளிலே முற் பிறவி, மறு பிறவி, 7 பிறவி என சொல்லப்பட்டிருக்கு. 


மகாவிஷ்ணு மாற்று திறனாளிகளின் மனது புண்படும்படி பேசியது தவறு. அது அவருடைய அனுபவமின்மையைக் காட்டுகிறது. மற்றபடி அவரை கைது செய்வது தான் தீர்மானம் என்பது கிடையாது. அவரை அழைத்து காவல்துறையினர் இது போன்று மாற்றுதிறனாளிகளின் மனதை புண்படுத்தும் படி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கலாம். 


நீதிமன்றத்திலே சில நீதிமன்ற அவமதிப்புகளுக்கு மன்னிப்பு கேட்க கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் கைது செய்யும் அளவிற்கு அவர்  தவறு ஒன்றும் செய்யவில்லை. அவர் மாற்றுத்திறனாளிகளின் மனது புண்படும்படி பேசியது தவறு. அது கண்டிக்கத்தக்கது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்தின் தேவையற்ற நடவடிக்கை. இது காட்டு மிராண்டித்தனமாக இருக்கிறது. அவரை பள்ளிகளில் அழைத்து பேச கூறியதே தவறு என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்