விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில மாநாட்டுக்காக நேற்று இரவு முதலே குவியத் தொடங்கிய தொண்டர்களால் அந்தப் பகுதி நேற்றே களை கட்ட ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே தடுப்புகளைத் தாண்டி தொண்டர்கள் மாநாட்டு ஏரியாவுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் நடைபெறவுள்ளது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு வகையான ஏற்பாடுகளைச் செய்து எந்தவிதமான குறையும் இல்லாமல் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாடு விஜய் கட்சியினர் மட்டும் இல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கொள்கை என்னவாக இருக்கும், விஜய்யின் இலக்கு என்னவாக இருக்கும், விஜய் என்ன பேசப் போகிறார், விஐபிக்கள் யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்று பலவிதமான எதிர்பார்ப்புகள், ஆர்வம் அதிகமாகவே உள்ளது.

இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கி 9 மணி வாக்கில் மாநாட்டை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 மணி முதல் மாநாட்டுத் திடலுக்குள் தொண்டர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொண்டர்கள் நேற்று இரவு முதலே குவியத் தொடங்கி விட்டனர். இது அதிகாலை வாக்கில் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. பல்வேறு ஊர்களிலிருந்து வந்தவர்கள் மாநாடு நடைபெறும் இடத்திற்கு அலை அலையாக வரத் தொடங்கியதால் அந்த இடமே மனித் தலைகளாக காட்சி அளிக்கிறது. அதில் பலர் ஆர்வம் மிகுதியால் தடுப்புகளைத் தாண்டி மாநாட்டு திடலுக்குள் புகத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பாதுகாவலர்களே அதிகம் உள்ளனர். காவல்துறையினர் அதிகம் இல்லை. இதனால் தனியார் பாதுகாவலர்களால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மாநாட்டுத் திடலுக்குள் புகுந்தவர்களை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. உள்ளே புகுந்த தொண்டர்கள் சேர்களில் போய் அமர்ந்து கொண்டனர். கடும் வெயில் அடித்தாலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் தங்களது தலைவனை அருகே இருந்து காண வேண்டும் என்ற ஆர்வமே அவர்களிடம் மிகுதியாக உள்ளது. காலையிலே இப்படி இருக்கைகளை தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் இனி அடுத்தடுத்து வரும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு வெளியேயும் பல லட்சம் பேர் குவியும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}