விக்கிரவாண்டி: தவெக மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என தவெக கட்சி தலைமைக்கு காவல்துறை அறிவுறுத்திய நிலையில் கச்சிதமாக அதற்குள்ளாகவே மாநாட்டை முடித்து அசத்தியுள்ளது தவெக தலைமை.
தவெக கட்சி மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாடுக்கு வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் கூடியது. இதனால் முன்கூட்டியே மாநாடு தொடங்கியது. விஜய் கட்சிக் கொடியை ஏற்றினார். கொள்கை பாடலையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து விஜய்யின் உரை இடம் பெற்றது.
இந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருப்பதால் கூட்டத்தை சீக்கிரமே முடித்தால், அதாவது இரவு 7 மணிக்குள் முடித்தால் தொண்டர்கள் பத்திரமாக ஊர் திரும்ப எளிதாக இருக்கும். எனவே பாதுகாப்பு கருதி கூட்டத்தை விரைந்து முடிக்க தவெக தலைமைக்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வந்த மக்கள் விரைந்து, பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்பதால் மாலை நேரத்தில் இன்னும் கூட்டம் அதிகமாகும் என்பதாலும் இந்தக் கோரிக்கையை காவல்துறை வைத்தது. ஏற்கனவே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறுங்களிலும் அணி வகுத்து நிற்கும் நிலையும் இருந்தது. எனவேதான் இந்த கோரிக்கையை காவல்துறை வைத்தது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இதுதொடர்பான கோரிக்கையை விஜய் உடனடியாக ஏற்றுக் கொண்டாராம். அதன்படியே அவரது பேச்சை ஆறரை மணி போல முடித்துக் கொண்டார். 7 மணிக்குள்ளாகவே மாநாடும் முடிவடைந்ததால் காவல்துறையும் நிம்மதி அடைந்துள்ளது. தற்போது பாதுகாப்பான முறையில் தொண்டர்களை அனுப்பி வைக்கும் வேலையில் தவெக தன்னார்வத் தொண்டர்களும், காவல்துறையும் ஈடுபட்டுள்னர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}