விக்கிரவாண்டி: தவெக மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என தவெக கட்சி தலைமைக்கு காவல்துறை அறிவுறுத்திய நிலையில் கச்சிதமாக அதற்குள்ளாகவே மாநாட்டை முடித்து அசத்தியுள்ளது தவெக தலைமை.
தவெக கட்சி மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாடுக்கு வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் கூடியது. இதனால் முன்கூட்டியே மாநாடு தொடங்கியது. விஜய் கட்சிக் கொடியை ஏற்றினார். கொள்கை பாடலையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து விஜய்யின் உரை இடம் பெற்றது.
இந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருப்பதால் கூட்டத்தை சீக்கிரமே முடித்தால், அதாவது இரவு 7 மணிக்குள் முடித்தால் தொண்டர்கள் பத்திரமாக ஊர் திரும்ப எளிதாக இருக்கும். எனவே பாதுகாப்பு கருதி கூட்டத்தை விரைந்து முடிக்க தவெக தலைமைக்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வந்த மக்கள் விரைந்து, பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்பதால் மாலை நேரத்தில் இன்னும் கூட்டம் அதிகமாகும் என்பதாலும் இந்தக் கோரிக்கையை காவல்துறை வைத்தது. ஏற்கனவே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறுங்களிலும் அணி வகுத்து நிற்கும் நிலையும் இருந்தது. எனவேதான் இந்த கோரிக்கையை காவல்துறை வைத்தது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இதுதொடர்பான கோரிக்கையை விஜய் உடனடியாக ஏற்றுக் கொண்டாராம். அதன்படியே அவரது பேச்சை ஆறரை மணி போல முடித்துக் கொண்டார். 7 மணிக்குள்ளாகவே மாநாடும் முடிவடைந்ததால் காவல்துறையும் நிம்மதி அடைந்துள்ளது. தற்போது பாதுகாப்பான முறையில் தொண்டர்களை அனுப்பி வைக்கும் வேலையில் தவெக தன்னார்வத் தொண்டர்களும், காவல்துறையும் ஈடுபட்டுள்னர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}