விக்கிரவாண்டி: தவெக மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இரவு 7 மணிக்கு முன்பாக மாநாட்டை விரைந்து முடிக்க வேண்டும் என தவெக கட்சி தலைமைக்கு காவல்துறை அறிவுறுத்திய நிலையில் கச்சிதமாக அதற்குள்ளாகவே மாநாட்டை முடித்து அசத்தியுள்ளது தவெக தலைமை.
தவெக கட்சி மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாடுக்கு வரலாறு காணாத அளவுக்கு கூட்டம் கூடியது. இதனால் முன்கூட்டியே மாநாடு தொடங்கியது. விஜய் கட்சிக் கொடியை ஏற்றினார். கொள்கை பாடலையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து விஜய்யின் உரை இடம் பெற்றது.
இந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருப்பதால் கூட்டத்தை சீக்கிரமே முடித்தால், அதாவது இரவு 7 மணிக்குள் முடித்தால் தொண்டர்கள் பத்திரமாக ஊர் திரும்ப எளிதாக இருக்கும். எனவே பாதுகாப்பு கருதி கூட்டத்தை விரைந்து முடிக்க தவெக தலைமைக்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டிற்கு வந்த மக்கள் விரைந்து, பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்பதால் மாலை நேரத்தில் இன்னும் கூட்டம் அதிகமாகும் என்பதாலும் இந்தக் கோரிக்கையை காவல்துறை வைத்தது. ஏற்கனவே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் சாலையின் இருபுறுங்களிலும் அணி வகுத்து நிற்கும் நிலையும் இருந்தது. எனவேதான் இந்த கோரிக்கையை காவல்துறை வைத்தது.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இதுதொடர்பான கோரிக்கையை விஜய் உடனடியாக ஏற்றுக் கொண்டாராம். அதன்படியே அவரது பேச்சை ஆறரை மணி போல முடித்துக் கொண்டார். 7 மணிக்குள்ளாகவே மாநாடும் முடிவடைந்ததால் காவல்துறையும் நிம்மதி அடைந்துள்ளது. தற்போது பாதுகாப்பான முறையில் தொண்டர்களை அனுப்பி வைக்கும் வேலையில் தவெக தன்னார்வத் தொண்டர்களும், காவல்துறையும் ஈடுபட்டுள்னர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}