த.வெ.க. மாநாடு: வரலாறு காணாத கூட்டம் குவிவதால்.. 3 மணிக்கே மாநாடு தொடங்கும் என அறிவிப்பு!

Oct 27, 2024,11:58 AM IST

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கூட்டம் குவிந்து வருவதால் மாநாட்டை 4 மணிக்குப் பதில் 3 மணிக்கே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வி. சாலை பகுதியில் பிரமாண்ட திடலில் இன்று மாலை தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் போதாது என்பது போல மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடி வருகிறது.


மாநாட்டிற்கு வருவோர் அமருவதற்காக 75000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் காலையிலேயே பெருமளவில் தொண்டர்கள் உள்ளே வந்து அமர ஆரம்பித்து விட்டனர். இப்போதே கிட்டத்தட்ட அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. இதனால் இனிமேல் வருவோர் நின்று கொண்டுதான் மாநாட்டைப் பார்க்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.




அதேபோல பார்க்கிங் பகுதிகளும் காலையிலேயே நிரம்பி விட்டன. இன்னும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாலாபுறமிருந்தும் வந்து கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டுள்ளனர். இதனால் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக அளவிலான கூட்டம் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது மாநாடு நடைபெறும் பகுதியில் கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பலர் மயக்கமடைந்துள்ளனர். பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் முதலுதவி அளித்து அவர்களுக்கு குளுக்கோஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நடுப் பகலில் இன்னும் வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 


வெயில் அதிகமாக இருப்பதாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதாலும் மாநாட்டை 4 மணிக்குப் பதில் 3 மணிக்கே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர். கூட்டம் முன் கூட்டியே தொடங்குவதால் விஜய்யும் முன்கூட்டியே பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே மாநாட்டு வளாகத்தில் குடிநீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் குடிநீர்ப் பிரச்சினை தீரும் என்றும் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


விக்கிரவாண்டியில் கடும் கூட்ட நெரிசல்


மறுபக்கம், பல்வேறு டோல் கேட்களிலும் இலவசமாக தவெகவினரின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் கூட பெருமளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக தெற்கு, மேற்கு மாவட்டங்களிலிருந்து மிக அதிக அளவில் வாகனங்கள் வந்து கொண்டுள்ளன. 


அதிக அளவில் வாகனங்களும், தொண்டர்களும் வந்து கொண்டிருப்பதால், விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு முன்பும் பின்பும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் தவெகவினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்