விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கூட்டம் குவிந்து வருவதால் மாநாட்டை 4 மணிக்குப் பதில் 3 மணிக்கே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வி. சாலை பகுதியில் பிரமாண்ட திடலில் இன்று மாலை தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் போதாது என்பது போல மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடி வருகிறது.
மாநாட்டிற்கு வருவோர் அமருவதற்காக 75000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் காலையிலேயே பெருமளவில் தொண்டர்கள் உள்ளே வந்து அமர ஆரம்பித்து விட்டனர். இப்போதே கிட்டத்தட்ட அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. இதனால் இனிமேல் வருவோர் நின்று கொண்டுதான் மாநாட்டைப் பார்க்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல பார்க்கிங் பகுதிகளும் காலையிலேயே நிரம்பி விட்டன. இன்னும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாலாபுறமிருந்தும் வந்து கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டுள்ளனர். இதனால் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக அளவிலான கூட்டம் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மாநாடு நடைபெறும் பகுதியில் கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பலர் மயக்கமடைந்துள்ளனர். பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் முதலுதவி அளித்து அவர்களுக்கு குளுக்கோஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நடுப் பகலில் இன்னும் வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
வெயில் அதிகமாக இருப்பதாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதாலும் மாநாட்டை 4 மணிக்குப் பதில் 3 மணிக்கே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர். கூட்டம் முன் கூட்டியே தொடங்குவதால் விஜய்யும் முன்கூட்டியே பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மாநாட்டு வளாகத்தில் குடிநீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் குடிநீர்ப் பிரச்சினை தீரும் என்றும் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் கடும் கூட்ட நெரிசல்
மறுபக்கம், பல்வேறு டோல் கேட்களிலும் இலவசமாக தவெகவினரின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் கூட பெருமளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக தெற்கு, மேற்கு மாவட்டங்களிலிருந்து மிக அதிக அளவில் வாகனங்கள் வந்து கொண்டுள்ளன.
அதிக அளவில் வாகனங்களும், தொண்டர்களும் வந்து கொண்டிருப்பதால், விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு முன்பும் பின்பும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் தவெகவினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}