விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது, சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற செயல் திட்டம்தான்.
நீண்ட காலமாகவே தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைதான் இது. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெறுபவர் தான் ஆளுநர். இவர் மாநிலத்தின் அரசயலமைப்புத் தலைவராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுபவர். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான தகவல் தொடர்பாளராக ஆளுநர் கருதப்படுகிறார்.
ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே மோதல்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று நீண்ட காலமாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. அதை கொள்கையாகவும் அறிவித்து செயல்படுகிறது திமுக.

தற்போதைய திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் வரலாறு காணாத மோதலாகவும் இருந்து வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆர்.என்.ரவிஆளுநராக பதவி வகித்து வருகிறார்.அவர் பதவி வகித்தது முதல் தற்போது வரை ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தது கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆளுநர் பதவி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அறிவிப்பில் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற திமுகவின் அதே நிலைப்பாட்டை தவெகவும் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}