விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது, சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற செயல் திட்டம்தான்.
நீண்ட காலமாகவே தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைதான் இது. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெறுபவர் தான் ஆளுநர். இவர் மாநிலத்தின் அரசயலமைப்புத் தலைவராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுபவர். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான தகவல் தொடர்பாளராக ஆளுநர் கருதப்படுகிறார்.
ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே மோதல்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று நீண்ட காலமாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. அதை கொள்கையாகவும் அறிவித்து செயல்படுகிறது திமுக.

தற்போதைய திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் வரலாறு காணாத மோதலாகவும் இருந்து வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆர்.என்.ரவிஆளுநராக பதவி வகித்து வருகிறார்.அவர் பதவி வகித்தது முதல் தற்போது வரை ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தது கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆளுநர் பதவி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அறிவிப்பில் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற திமுகவின் அதே நிலைப்பாட்டை தவெகவும் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}