விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது, சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற செயல் திட்டம்தான்.
நீண்ட காலமாகவே தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைதான் இது. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெறுபவர் தான் ஆளுநர். இவர் மாநிலத்தின் அரசயலமைப்புத் தலைவராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுபவர். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான தகவல் தொடர்பாளராக ஆளுநர் கருதப்படுகிறார்.
ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே மோதல்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று நீண்ட காலமாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. அதை கொள்கையாகவும் அறிவித்து செயல்படுகிறது திமுக.
தற்போதைய திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் வரலாறு காணாத மோதலாகவும் இருந்து வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆர்.என்.ரவிஆளுநராக பதவி வகித்து வருகிறார்.அவர் பதவி வகித்தது முதல் தற்போது வரை ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தது கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆளுநர் பதவி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அறிவிப்பில் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற திமுகவின் அதே நிலைப்பாட்டை தவெகவும் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}