விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது, சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற செயல் திட்டம்தான்.
நீண்ட காலமாகவே தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கைதான் இது. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெறுபவர் தான் ஆளுநர். இவர் மாநிலத்தின் அரசயலமைப்புத் தலைவராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுபவர். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான தகவல் தொடர்பாளராக ஆளுநர் கருதப்படுகிறார்.
ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே மோதல்தான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று நீண்ட காலமாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. அதை கொள்கையாகவும் அறிவித்து செயல்படுகிறது திமுக.

தற்போதைய திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் வரலாறு காணாத மோதலாகவும் இருந்து வருகிறது. கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆர்.என்.ரவிஆளுநராக பதவி வகித்து வருகிறார்.அவர் பதவி வகித்தது முதல் தற்போது வரை ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்தது கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆளுநர் பதவி தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை அறிவிப்பில் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை என்ற திமுகவின் அதே நிலைப்பாட்டை தவெகவும் முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}