எழுச்சி மிக்க வரவேற்பு.. ஆர்ப்பரித்த தொண்டர்கள்.. உற்சாகமான வரவேற்பை கண்டு கண் கலங்கிய விஜய்!

Oct 27, 2024,04:38 PM IST

விழுப்புரம் : மாநாட்டு அரங்கில் தொண்டர்கள் இடையே ரேம்ப் வாக் சென்ற விஜய், தொண்டர்களின் வரவேற்பை கண்டு மேடையிலேயே  கண் கலங்கினார்.


நடிகர் விஜய் தமிழ் வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். தொடரகந்து தனது கட்சியின் கொடி, பாடல் ஆகியவற்றையும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்தப்படுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் போலீசார் தெரித்த 21 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முடியாததால் மாநாட்டின் தேதி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.




அக்டோபர் 27ம் தேதியான இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் கலந்து கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்களும், ரசிகர்களும் மாநாட்டு அரங்கிற்கு லட்சக்கணக்கானவர்கள் காலை முதலே குவிய துவங்கி விட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலேயே தொண்டர்கள் மாநாட்டு அரங்கிற்கு வந்து காத்திருந்தனர்.


பறை இசை, பாரம்பரிய நடனங்களுடன் மாநாட்டு துவங்கியது. சரியாக மாலை 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய், மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில் ரேம்ப் வாக் மூலம் தொண்டர்களுக்கு நடுவே நடந்து சென்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் விஜய். தொண்டர்கள் வீசி எறிந்த கட்சியின் துண்டுகளையும் அணிந்து கொண்டார். 


தொண்டர்கள் தனக்கு அளித்த வரவேற்பை கண்டு மேடையிலேயே கண் கலங்கினார் விஜய். பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள், மாமன்னர்கள் ஆகியோர்களுக்கு மேடையில் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.


மாநாட்டு பாடலை வெளியிட்ட நடிகர் விஜய், 101 அடியில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடியை பட்டனை அழுத்தி ஏற்றி வைத்தார் விஜய்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்