விழுப்புரம் : மாநாட்டு அரங்கில் தொண்டர்கள் இடையே ரேம்ப் வாக் சென்ற விஜய், தொண்டர்களின் வரவேற்பை கண்டு மேடையிலேயே கண் கலங்கினார்.
நடிகர் விஜய் தமிழ் வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். தொடரகந்து தனது கட்சியின் கொடி, பாடல் ஆகியவற்றையும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்து வைத்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்தப்படுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் போலீசார் தெரித்த 21 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முடியாததால் மாநாட்டின் தேதி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அக்டோபர் 27ம் தேதியான இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் கலந்து கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொண்டர்களும், ரசிகர்களும் மாநாட்டு அரங்கிற்கு லட்சக்கணக்கானவர்கள் காலை முதலே குவிய துவங்கி விட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலேயே தொண்டர்கள் மாநாட்டு அரங்கிற்கு வந்து காத்திருந்தனர்.
பறை இசை, பாரம்பரிய நடனங்களுடன் மாநாட்டு துவங்கியது. சரியாக மாலை 4 மணியளவில் மாநாட்டு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய், மேடையில் அமைக்கப்பட்டிருந்த பாதையில் ரேம்ப் வாக் மூலம் தொண்டர்களுக்கு நடுவே நடந்து சென்று, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார் விஜய். தொண்டர்கள் வீசி எறிந்த கட்சியின் துண்டுகளையும் அணிந்து கொண்டார்.
தொண்டர்கள் தனக்கு அளித்த வரவேற்பை கண்டு மேடையிலேயே கண் கலங்கினார் விஜய். பிறகு சுதந்திர போராட்ட தியாகிகள், மாமன்னர்கள் ஆகியோர்களுக்கு மேடையில் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மாநாட்டு பாடலை வெளியிட்ட நடிகர் விஜய், 101 அடியில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த கட்சியின் கொடியை பட்டனை அழுத்தி ஏற்றி வைத்தார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}