விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் பேசப் போவதுதான் அத்தனை பேரையும் எகிற வைத்திருக்கிறது. அவர் என்ன பேசப் போகிறார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
அரசியலுக்கு வருவேன், கட்சி ஆரம்பிப்பேன் என்று முன்பே கூறியிருந்தார் விஜய். அதன்படி கட்சி ஆரம்பித்தார், கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கட்சி நிர்வாகிகளை நியமித்தார். கட்டமைப்பை வலுப்படுத்தினார்.. படிப்படியாக ஒவ்வொன்றாக செய்து வந்த விஜய் இதோ இன்று தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் கூட்டி விட்டார்.
பெரிய பெரிய அரசியல் கட்சிகளே சற்று திகிலுடன்தான் விஜய்யின் பாய்ச்சலை பார்த்துக் கொண்டுள்ன. இவர் யாரைப் பாதிக்கப் போகிறார் என்பது ஒரு பக்கம் விவாதமாக மாறியிருந்தாலும் கூட, விஜய் இதுவரை முழுமையாக தனது அரசியல் பேச்சை பேசவில்லை என்பதால் இன்று அவர் பேசப் போவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய மாநாட்டில் அவர் 2 மணி நேரம் பேசுவார், 1 மணி நேரம் பேசுவார் என்றெல்லாம் முன்பு செய்திகள் வந்தன. ஆனால் அதிகபட்சம் அவர் 45 நிமிடங்கள் வரையே பேசக் கூடும் என்று தற்போது கூறப்படுகிறது. காரணம், காலை முதலே தொண்டர்கள் வந்து வெயிலில் காத்திருப்பதால் அவர்கள் மாலைக்குள் சோர்வடையக் கூடும் என்பதால் விஜய்யின் பேச்சை சுருக்கமாக அதே சமயம், போதிய அளவிலான நேரத்திலும் அவர் பேசக் கூடும் என்று சொல்கிறார்கள். ஒரு வேளை அப்படியே இருந்தாலும் கூட 1 மணி நேரம் வரை விஜய் அதிகபட்சமாக பேசக் கூடம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பேச்சை வைத்துத்தான் தவெகவின் எதிர்காலம் இருக்கிறது என்பதால் அவரது பேச்சு எப்படி இருந்தாலும் அதிரடியாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. தொண்டர்களுக்கு மிகப் பெரிய அளவில் உற்சாகம் கொடுக்கும் வகையிலும், பொதுமக்களைக் கவரும் வகையிலும் தேவையில்லாத அலங்காரங்கள் இல்லாமல் சிம்பிளாக அதேசமயம், யோசிக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று விஜய்க்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}