விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகள் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடம் செம டிரெண்டாகி வருகிறது. மேலும் தங்களது அரசியல் வழிகாட்டிகளையும், முக்கியக் கொள்கையையும் இந்தப் பாடல் மூலம் தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை வெளியிடப்பட்டது. கட்சியின் மாநாட்ட பாடலுடன், கட்சியின் கொள்கையும் பாடலாக வெளியிடப்பட்டது. திருக்குறள், கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய வரிகளுடன் இந்த கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் மாநாட்டில் இருமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
5 அரசியல் வழிகாட்டிகள்

கட்சியின் கொள்கை பாடலின் மத்தியில் கட்சியின் தலைவரான விஜய்யே பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது. அதில், பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மா தான் தவெகவின் அரசியல் வழிகாட்டிகள். மதச்சார்பற்ற சம நீதிக் கொள்கை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என கூறுவதாக அமைந்திருந்தது.
கட்சியின் கொள்கை பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வெற்றி...வெற்றி...வெற்றி என துவங்குவதாகவும், வெற்றி..வெற்றி என முழக்குவது போலவுமே அமைக்கப்பட்டுள்ளது. இது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தனி நபர் யாரையும் குறிப்பிடாமல், சுதந்திர போராட்ட தியாகிகள், பெரியார், காமராஜர், அம்பேத்கர் என அரசியல் மேதைகளை குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ளது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}