விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகள் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களிடம் செம டிரெண்டாகி வருகிறது. மேலும் தங்களது அரசியல் வழிகாட்டிகளையும், முக்கியக் கொள்கையையும் இந்தப் பாடல் மூலம் தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை வெளியிடப்பட்டது. கட்சியின் மாநாட்ட பாடலுடன், கட்சியின் கொள்கையும் பாடலாக வெளியிடப்பட்டது. திருக்குறள், கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய வரிகளுடன் இந்த கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் மாநாட்டில் இருமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
5 அரசியல் வழிகாட்டிகள்
கட்சியின் கொள்கை பாடலின் மத்தியில் கட்சியின் தலைவரான விஜய்யே பேசுவது போல் அமைக்கப்பட்டிருந்தது. அதில், பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மா தான் தவெகவின் அரசியல் வழிகாட்டிகள். மதச்சார்பற்ற சம நீதிக் கொள்கை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என கூறுவதாக அமைந்திருந்தது.
கட்சியின் கொள்கை பாடல் உள்ளிட்ட அனைத்து பாடல்களும் வெற்றி...வெற்றி...வெற்றி என துவங்குவதாகவும், வெற்றி..வெற்றி என முழக்குவது போலவுமே அமைக்கப்பட்டுள்ளது. இது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தனி நபர் யாரையும் குறிப்பிடாமல், சுதந்திர போராட்ட தியாகிகள், பெரியார், காமராஜர், அம்பேத்கர் என அரசியல் மேதைகளை குறிப்பிட்டு அமைக்கப்பட்டுள்ளது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}