தவெக மாநாடு செப்டம்பர் 23ம் தேதி.. திட்டமிட்டபடி நடைபெறும் - புஸ்ஸி ஆனந்த் உறுதி

Sep 02, 2024,08:07 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அந்த கட்சியின் வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.அத்துடன் தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக் கொடி அறிமுகம் செய்ததில் இருந்து அடுத்து அடுத்து பல எதிர்ப்புகளை சந்தித்த வருகிறார். இதைத் தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டை செப்டம்பர் 23ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தி, அங்கிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை துவங்க உள்ளார்.




இந்நிலையில் மாநாட்டை நடத்துவதற்காக அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரின் அலுவலகங்களில் மனு அளிக்கப்படிருந்தது.இதற்கு இடையே தவெக மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜோதிடரை அணுகியுள்ளதாகவும், மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்தில் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.


இந்நிலையில், 21 கேள்விகள் எழுப்பி, விக்கிரவாண்டி போலீசார் சார்பில் விஜய் கட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.போலீசார் எழுப்பிய 21 கேள்விகளுக்கும் பதிலளிக்க விஜய் கட்சிக்கு 5 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் அனைத்திற்கும் விஜய் கட்சி சார்பில் முறையாக பதில் அளிக்கப்பட்டால் மட்டுமே விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டிற்கு போலீசாரின் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே, மாநாடு தொடர்பாக புஸ்ஸி ஆனந்த் விளக்கியுள்ளார். விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. சுணக்கமின்றி பணியாற்றுங்கள், மாநாடு தள்ளிப் போகாது என்று கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதி தெரிவித்துள்ளாராம். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் கட்சிக் கொடிகளை தவெக கட்சியினர் தடபுடலாக ஏற்றி மறுபக்கம் தவெக கொடியினை பட்டொளி வீசிப் பறக்க விட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்