சென்னை : தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு அக்கட்சியின் நிர்வாகி அதிரடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், சமூக வலைதளங்களில் பரவி வரும் கூட்டணி குறித்த தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று தெரிவித்துள்ளார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி :
கடந்த சில நாட்களாக, தவெக கட்சி பாஜக, அதிமுக மற்றும் இதர அரசியல் கட்சிகளுடன் ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் பரவின. குறிப்பாக, சசிகலா மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருடன் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகச் செய்திகள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மற்றொரு புறம் விஜய், என்டிஏ கூட்டணிக்கு வர போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நிர்மல் குமார்:

"குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும், எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள். பரப்பப்படும் பொய்ச் செய்திகள் குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களிலும் இதேபோன்ற யுக்திகள் கையாளப்பட்டதாகவும், தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். பொறுப்புள்ள ஊடகங்களும், சமூக வலைதளப் பயனாளர்களும் செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்துடன் அவரது இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
2026 தேர்தல் களம் :
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்துப் பல யூகங்கள் நிலவி வருகின்றன. ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த மறுப்பு அறிக்கை, தவெக தனது தனித்துவத்தைப் பேண விரும்புவதையே காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தவெக, என்டிஏ கூட்டணிக்கு செல்கிறது என்ற தகவலை அதிமுக, பாஜக தலைவர்கள் மறுத்து வந்த நிலையில் தற்போது தவெக நிர்வாகிகளும் மறுத்துள்ளனர். அதே போல் என்டிஏ கூட்டணிக்கு தவெக.,வை வரவைப்பதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசி வருவதாக வெளியான தகவல் பற்றி அவரிடம் கேட்டதற்கு, தான் விஜய்யை சந்தித்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாக தெரிவித்துள்ளார். இதனால் என்டிஏ கூட்டணியில் தவெக வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்லப்படுகிறது.
இந்த முறை தனித்து போட்டியிடவே தவெக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகிகளும் அதையே விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டு, அப்போது தவெக.,விடம் கணிசமான எம்எல்ஏ.,க்கள் இருந்தால் அந்த சமயத்தில் விஜய், என்டிஏ.,விற்கு ஆதரவு அளிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது, விஜய் என்டிஏ கூட்டணிக்கு செல்வதாக பரவும் செய்திகள் திமுக.,வால் திட்டமிட்டு பரப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. என்டிஏ கூட்டணி பலமின்றி இருப்பதால், விஜய்யின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க திமுக திட்டமிடுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
National Vaccination Day.. குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
பட்டு பட்டு... பட்டாம்பூச்சி.. பார்த்துப் பார்த்து ரசிச்சாலே.. மனதுக்கு மகிழ்ச்சி!
தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
அன்பு உயர்த்தும் மொழி .. ஆணவே அழிக்கும் மொழி!
நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை..தவெக திட்டவட்டம்
முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்
சிபிஐ-க்கு விஜய் கடிதம்: விசாரணையை சென்னையில் நடத்த கோரிக்கை
{{comments.comment}}