வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

Sep 20, 2024,05:25 PM IST

சென்னை: அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டியில் தமிழ் வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.


கடந்த பிப்ரவரி 2ம் தேதி தவெக கட்சியை  தொடங்கினார் நடிகர் விஜய். அன்று முதல் இன்று வரை கட்சி பணிகள் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். இந்த கட்சியின் முக்கிய நிகழ்வான கட்சி மாநாடு எப்போது நடக்கும் என்று அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர். 


இந்நிலையில், அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டியில் தமிழ் வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:


என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,




தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். 


நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள். கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகும் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது.


தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும் பாதையை அமைப்போம்!


இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.


விரைவில் சந்திப்போம் வாகை  சூடுவோம் என்று தெரிவித்துள்ளார் விஜய். மாநாட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து விஜய் ரசிர்கள் உற்சாகமாகியுள்ளனர். மிகப் பெரிய அளவில் மாநாட்டில் குழுமி புதிய வரலாறு படைக்க இப்போதே தயாராக ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே மாநாட்டுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்