விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வருபவர்கள் கொடுப்பதற்காக பிஸ்கட், மிக்சர், தண்ணீர் பாட்டில்கள் கொண்ட ஸ்நாக்ஸ் பை தயாரித்து ரெடியாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகமே எதிர் பார்த்து காத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரங்கிலும், எல்இடி டிவி, 2 குடிநீர் டேங்குகளில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான ஏற்பாடுகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேரி கோல்ட் பிஸ்கட் பாக்கெட் 1, மிக்சர் பாக்கெட் 2 மற்றும் குட்டி தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை ஒரு கேரி பேக்கில் போட்டு கையில் கொடுக்கவுள்ளனர். இதற்காக மதுரையில் இருந்து 8 லட்சத்திற்கும் அதிகமாக தின்பண்டங்கள் பேக் செய்யப்பட்டு விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இதை பேக் செய்துள்ளன்ர. கூடுதலாக தேவைப்பட்டால் தருவதற்காக விழுப்புரம் மற்றும் புதுச்சேரியிலும் பேக் செய்யும் பணிகள் நடந்து வருகின்றனவாம்.
மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் கேட்கும் அனைவருக்கும் கொடுக்க விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. யாரும் பசியுடன் போகக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளாராம். கட்சி சார்பில் தரப்படும் ஸ்நாக்ஸ் தவிர, மாவட்ட கட்சி நிர்வாகங்கள் சார்பிலும் பாக்கெட் போட்டு ஸ்நாக்ஸ் தர ஏற்பாடு செய்துள்ளனராம். பகலில் வெயில் அதிகம் இருப்பதால் பலர் தொண்டர்களுக்கு இலவசமாக தொப்பி தரவும் ஏற்பாடு செய்துள்ளனராம்.

மேலும், மாநாட்டிற்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வர வேண்டாம் என தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அது தொடர்பாக கூறப்படுகையில், தொண்டர்கள், பொதுமக்களை பேருந்துகளில் அழைத்து வரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் யாரும் வரும் வழியில் டாஸ்மாக்கில் வாகனங்களை நிறுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}