சென்னை: தென்னகத்தின் சாக்ரடீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பெரியார் என்று பலராலும் அறியப்படுபவர் ஈ.வெ.இராமசாமி. இவர் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி ஈரோட்டில் பிறந்தவர். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கடந்த 2021ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில்,

சாதி, மத ஆதிக்கம் மற்றும்
மூட பழக்க வழக்கங்களால்
விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக
மக்களிடையே விழிப்புணர்வை
விதைவித்தவர்;
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்ற சுய விடுதலை வேட்கையின்
மூலம், ஏற்றத்தாழ்வுகளால்
உண்டாக்கப்பட்ட அடிமைத்
தளைகளை அறுத்தெறிந்தவர்;
மக்களைப் பகுத்தறிவு
மனப்பான்மையுடன் போராடத்
தூண்டியவர்; சமூகச்
சீர்திருத்தவாதி, பாகுத்தறிவுப்
பகலவன், தென்னகத்தின்
சாக்ரடீஸ், தந்தை பெரியார்
அவர்களின் பிறந்த நாளில்,
அவர் வலியுறுத்திய பெண்
உரிமை, பெண்கல்வி,
பெண்கள் பாதுகாப்பு,
சமத்துவம்,
சம உரிமை,
சமூக நீதிப்
பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்யின் கொள்கை என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் பெரியாரின் வழியைப் பின்பற்றுவோம் என்று அவர் கூறியிருப்பதன் மூலம் திராவிட கொள்கையையே அவரும் கையில் எடுக்கப் போகிறாரோ என்ற ஆர்வத்தைக் கிளறி விட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}