சென்னை: விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று விருந்து வைத்துள்ளார் கட்சித் தலைவர் விஜய். விருந்திற்கு வந்தவர்களை வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சித் தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் பேசினார். தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கை என்ன என்றும், திமுக மற்றும் பாஜகவை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தவெக கூட்டணி ஆட்சிக்கு தயார் என்றும், அத்துடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டிற்கு சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. வி சாலை கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை வழங்கியிருந்தனர். அந்த நிலங்களை மாநாட்டிற்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தவெக கட்சி மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜய் இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று விருந்திற்கு விவசாயிகள் அவரவர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
விருந்திற்கு வந்தவர்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றார். தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}