சென்னை: விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று விருந்து வைத்துள்ளார் கட்சித் தலைவர் விஜய். விருந்திற்கு வந்தவர்களை வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சித் தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் விஜய் 45 நிமிடங்கள் பேசினார். தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொள்கை என்ன என்றும், திமுக மற்றும் பாஜகவை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தவெக கூட்டணி ஆட்சிக்கு தயார் என்றும், அத்துடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டிற்கு சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. வி சாலை கிராமத்தைச் சேர்ந்த பல்வேறு நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை வழங்கியிருந்தனர். அந்த நிலங்களை மாநாட்டிற்கு பயன்படுத்தி விட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தவெக கட்சி மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜய் இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று விருந்திற்கு விவசாயிகள் அவரவர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
விருந்திற்கு வந்தவர்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாசலுக்கே வந்து அழைத்துச் சென்றார். தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}