14 வயது சிறுவனுடன் கார் ஓட்டிப் பழகிய 17 வயது சிறுவன்.. விபத்துக்குள்ளாகி.. 2 பேரும் பலி!

Jun 11, 2024,02:14 PM IST

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை  அருகே  14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு கார் ஓட்ட பழகிய சிறுவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


நாமக்கல் மாவட்டம் பெரியமருதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் 17 வயதுடைய  லோகேஷ்சும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய 14 வயது மகன் சுதர்ஷனும் நண்பர்கள்.  இருவரும் பள்ளி செல்லாமல் இருந்து வந்துள்ளனர். நேற்று இரவு  லோகேஷ் சுதர்ஷனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி தனது அப்பாவின் காரை இரவு 11 மணியளவில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.




அப்போது, கார்  கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்ட பழகிய இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல்   தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார். அப்பகுதிக்கு வந்து சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


சிறுவர்கள் விளையாட்டாக செய்த செயல் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்