14 வயது சிறுவனுடன் கார் ஓட்டிப் பழகிய 17 வயது சிறுவன்.. விபத்துக்குள்ளாகி.. 2 பேரும் பலி!

Jun 11, 2024,02:14 PM IST

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை  அருகே  14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு கார் ஓட்ட பழகிய சிறுவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.


நாமக்கல் மாவட்டம் பெரியமருதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் 17 வயதுடைய  லோகேஷ்சும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய 14 வயது மகன் சுதர்ஷனும் நண்பர்கள்.  இருவரும் பள்ளி செல்லாமல் இருந்து வந்துள்ளனர். நேற்று இரவு  லோகேஷ் சுதர்ஷனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி தனது அப்பாவின் காரை இரவு 11 மணியளவில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.




அப்போது, கார்  கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்ட பழகிய இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல்   தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார். அப்பகுதிக்கு வந்து சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


சிறுவர்கள் விளையாட்டாக செய்த செயல் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்