நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை அருகே 14 வயது சிறுவன் ஓட்டி வந்த காரால் விபத்து ஏற்பட்டு கார் ஓட்ட பழகிய சிறுவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
நாமக்கல் மாவட்டம் பெரியமருதூரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் 17 வயதுடைய லோகேஷ்சும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய 14 வயது மகன் சுதர்ஷனும் நண்பர்கள். இருவரும் பள்ளி செல்லாமல் இருந்து வந்துள்ளனர். நேற்று இரவு லோகேஷ் சுதர்ஷனுக்கு கார் ஓட்ட கற்றுத்தருவதாக கூறி தனது அப்பாவின் காரை இரவு 11 மணியளவில் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு காரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்ட பழகிய இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த போலீசார். அப்பகுதிக்கு வந்து சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் விளையாட்டாக செய்த செயல் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}