டில்லி : நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 வைரசின் இரண்டு புதிய அறிகுறிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை விட இந்த புதிய அறிகுறிகள் தான் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் மற்றொரு வகையான ஜேஎன் 1 வகை வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 2 பேரும், கர்நாடகா, தமிழகம் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

இதற்கு முன்பு பரவிய கொரோனா வகைகளில் மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, மணம், சுவை எதுவும் தெரியாமல் இருப்பது ஆகியவை தான் அறிகுறிகளாக சொல்லப்பட்டன. இந்நிலையில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிதாக இரண்டு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் தூக்கம் இன்றி சிரமப்படுவார்கள் என்றும், அதிகமாக கவலைப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் மற்ற வகைகள் கொரோனாவிற்கும் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஜேஎன் 1 வகை கொரோனா வந்தது முதலே பல்வேறு தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. இது வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் கூட உயிர் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பது சற்று ஆறுதலானது. எப்படி இருந்தாலும் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. கொரோனாவுடன் வாழப் பழகி நாம் சில வருடங்களாகி விட்டாலும் கூட எப்போதும் சற்று ஜாக்கிரதையாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதுதானே!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}