டில்லி : நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 வைரசின் இரண்டு புதிய அறிகுறிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை விட இந்த புதிய அறிகுறிகள் தான் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் மற்றொரு வகையான ஜேஎன் 1 வகை வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 2 பேரும், கர்நாடகா, தமிழகம் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.
இதற்கு முன்பு பரவிய கொரோனா வகைகளில் மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, மணம், சுவை எதுவும் தெரியாமல் இருப்பது ஆகியவை தான் அறிகுறிகளாக சொல்லப்பட்டன. இந்நிலையில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிதாக இரண்டு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் தூக்கம் இன்றி சிரமப்படுவார்கள் என்றும், அதிகமாக கவலைப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் மற்ற வகைகள் கொரோனாவிற்கும் இருந்தது தெரிய வந்துள்ளது.
ஜேஎன் 1 வகை கொரோனா வந்தது முதலே பல்வேறு தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. இது வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் கூட உயிர் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பது சற்று ஆறுதலானது. எப்படி இருந்தாலும் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. கொரோனாவுடன் வாழப் பழகி நாம் சில வருடங்களாகி விட்டாலும் கூட எப்போதும் சற்று ஜாக்கிரதையாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதுதானே!
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}