டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் வர வர ரொம்ப மோசமாக நடந்து கொள்கின்றனர் சிலர். ரீல்ஸ் எடுப்பதற்காக வரம்பு மீறி நடந்து கொள்ளும் இவர்களால் ரயிலில் பயணிக்கும் மற்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான மெட்ரோ ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் இயல்பான முறையில் பயணிகள் நடந்து வரும் நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் மட்டும் பல அத்துமீறலான சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
முகம் சுளிக்க வைக்கும் ஆபாச செயல்கள் அதிக அளவில் இங்கு நடைபெறுகின்றன. அரைகுறை உடையுடன் பயணித்து பரபரப்பை ஏற்படுத்துவது, ரயிலுக்குள் டான்ஸ் ஆடுவது என்று பலரும் முகம் சுளிக்க வைக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு இளம் பெண்கள், ஹோலி பண்டிகையை ரயிலுக்குள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.

கலர் பொடிகளை உடம்பு முழுக்க பூசிக் கொண்டு இரு பெண்களும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு கசமுசா பாடலுக்கு மூவ்மென்ட் கொடுத்துள்ளனர். முகத்தை நெருக்கமாக வைத்துக் கொண்டும், மடியில் கிடத்தியும், அணைத்துக் கொண்டும் இவர்கள் செய்த செயல் ரயிலில் பயணித்தோரை அதிருப்திக்குள்ளாக்கியது.
இதையெல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லையா.. மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏன் இப்படிப்பட்ட செயல்களை தொடர்ந்து அனுமதிக்கிறது.. தடுக்க வேண்டாமா என்று பலரும் கொதிப்புடன் கேட்கின்றனர். இது மெட்ரோ ரயில் நிலையமா அல்லது ஆள் மயக்கும் நிலையமா என்றும் பலர் கேட்டுள்ளனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது சென்னை மெட்ரோ சொர்க்கம். ஒருவர் கூட இந்த ரயிலிலோ அல்லது ரயில் நிலையத்திலோ அத்துமீற முடியாது. அத்தனை பேரும் மிக மிக பாதுகாப்புடன் குறிப்பாக பெண்கள் தைரியமாகவும், பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் பயணிக்கும் வகையில் அருமையான முறையில் சென்னை மெட்ரோவின் சேவை சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்ன சொல்லுங்க.. நம்ம ஊரு நம்ம ஊருதான்!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}